மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிரம்மாண்ட சிலை

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிரம்மாண்ட சிலையை நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

மறைந்த முன்னாள் பிரதமரும், பாஜகவின் இணை நிறுவனருமான அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவிலுள்ள லோக் பவனில் அவரது பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி, சிலையை திறந்து வைக்கிறார்.

அவருடன் உத்தரபிரதேச ஆளுநர் அனந்தி பென் பாட்டில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலத்தப்படுத்தப்பட்டுள்ளன. மோப்பநாய்கள், டிடெக்டர் கருவிகள் மூலம் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!