HERO – படம் எப்படியிருக்கு ?

‘இரும்புத் திரை’ படத்தை இயக்கிய பி.எஸ். மித்ரனின் அடுத்த படம் இது.

கதாநாயகன் சக்திக்கு சக்திமான் ​போல சூப்பர் ஹீ​ரோ ஆக​வேண்டும் என்று ஆ​சை, தந்தையின் மருத்துவச் செலவுக்காக தன்னுடைய மதிப்பெண் பட்டியலையே விற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதற்குப் பிறகு, போலி சான்றிதழ்களை தயாரிப்பது, தனியார் பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்த்து, கமிஷன் பெறுவது என இருந்து வருகிறார்.

அதே பகுதியைச் சேர்ந்த புத்திசாலி மாணவியான மதிக்கு (இவானா) ஒரு பொறியியல் கல்லூரியில் இடம் வாங்கித்தர முயல்கிறான் சக்தி. ஆனால், மதியின் கண்டுபிடிப்பைத் திருடிக்கொண்டு, அவருக்கு இடம் இல்லை என்கிறார்கள். இதனால், மதி தற்கொலை செய்துகொள்கிறார். மதி போன்ற பல புத்திசாலி மாணவர்களைப் பராமரித்துவரும் சத்யமூர்த்தியைச் (அர்ஜுன்) சந்திக்கிறார் சக்தி. மூர்த்தி ஏன் வெளியுலகின் பார்வையிலிருந்து ஒதுங்கி வாழ்கிறார், வில்லன்களின் நோக்கம் என்ன, அவர்களை சக்தி என்ன செய்தார் என்பதெல்லாம் மீதிக் கதை.

படம் இறுதிக் கட்டத்தை நெருங்கும்போது சூப்பர் ஹீரோ அவதாரம் எடுக்கிறார் நாயகன். ஆனால், அந்த ரோலில் அவர் செய்யும் சாகசங்களும் சண்டைகளும் வழக்கமான தமிழ் சினிமா நாயகர்கள் செய்யும் சாகசங்களைவிட குறைவாகவே இருக்கிறது.

இந்தப் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகியிருக்கும் கல்யாணி பிரியதர்ஷன், சில காட்சிகளின் சிறப்பாகவே நடித்திருக்கிறார். ஆனால், திடீரென காணாமல்போய் விடுகிறார். அதேபோல ரோபோ சங்கரையும் சில காட்சிகளுக்குப் பிறகு காணவில்லை.

சிவகார்த்தியனை ஆக்ஷன் ஹீரோவாகப் பார்க்க விரும்பும் அவரது ரசிகர்கள் இந்தப் படத்தை ரசிக்கக்கூடும். மாணவர்களை வெறும் மதிப்பெண்களை மட்டும்வைத்து எடைபோடக்கூடாது; அவர்களுக்கென தனித் திறமைகள் இருக்கும் என்பதே படம் முழுக்க பல்வேறு விதங்களில் வலியுறுத்தப்படுகிறது மிகுந்த ஆறுதல்

ஹீரோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!