அழுகிய உடல்களை மறு பிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவு ஹைதராபாத்தில்

ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு நபர்களை காவல் துறையினர் டிசம்பர் 6 அன்று என்கவுண்டர் செய்தனர்.  என்கவுண்டர் செய்யப்பட்டவர்களின் உடல்கள் 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவர்களின் குடும்பத்தி​னை ​சேர்ந்தவர்கள் உடல்க​ளை வாங்காமல் மறுபரி​சோத​னைக்கு மன
தந்துள்ள நி​லையில் 
ஏற்கனவே உடல்கள் 50% அழுகிவிட்டதாக மருத்துவமனை கண்காணிப்பாளர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும் இன்னும் 7 முதல் 10 நாட்களில் உடல்கள் முற்றிலுமாக அழுக்கிவிடும் என்றும் தெரிவித்தார்.

மனுதாரர்கள் தரப்பில் இருந்து மறு பிரேதப் பரிசோதனைக்காக உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பிய கடிதத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது  உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அனைத்து ஆதாரங்களையும் பாதுகாக்க வேண்டும். எனவே மறு பிரேதப் பரிசோதனைக்காக நீதிமன்றம்தான் உத்தரவிடவேண்டும் என்று பிரகாஷ் ரெட்டி தெரிவித்தார். தெலங்கானா உயர் நீதிமன்றம், டிசம்பர் 23ம் தேதி மாலை 5 மணிக்குள் மறு பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என தீர்ப்பளித்தது. மேலும் மறு பிரேதப் பரிசோதனை முழுவதும் காணொளியாக பதிவுசெய்யப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

காந்தி மருத்துவமனை கண்காணிப்பாளர் ஷ்ரவன் உடல்களின் அழுகும் நிலை குறித்து குறிப்பிட்ட தகவல்களை கருத்தில் கொண்டு, இந்த மறு பிரேதப் பரிசோதனையை இந்திய மருத்துவ வாரியம் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடுவதாக நீதிமன்றம் தெரிவித்தது.

மறு பிரேதப் பரிசோதனைக்கு பிறகு காவல் துறையினரின் கண்காணிப்பில் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கபட வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!