ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 3500 கன அடியாகஅதிகரிப்பு ..!

 ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 3500 கன அடியாகஅதிகரிப்பு ..!

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 3500 கன அடியாக அதிகரித்துள்ளது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 3500 கனாடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று மாலை ஒகேனக்கலுக்கு 1,500 கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது வினாடிக்கு 3500 கன அடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த நான்கு மாதங்களாக கோடை வெப்பத்தால் நீர்வரத்து குறைந்து ஆங்காங்கு சிறு சிறு தண்ணீர் தேங்கி குட்டைகளாக காட்சியளித்த நிலையில், கர்நாடக மாநிலத்திலும், காவிரி கரையோர நீர் பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் தமிழ்நாடு – கர்நாடகா எல்லை பகுதியான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. இந்த நீர்வரத்தால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...