முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி

 முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி
இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பகலிரவு ஆட்டமாக சென்னையில் இன்று நடைபெறுகிறது.இந்திய அணி தரப்பில் கோலி, ரோகித் சர்மா, கே.எல். ராகுல் பேட்டிங்கிலும், ஷமி, சஹர், சஹல் போன்றோர் பந்துவீச்சிலும் எதிரணியைத் திணறடிக்கத் தயாராக உள்ளனர். காயம் காரணமாக விலகிய புவனேஷ்வர் குமாருக்கு பதில் ஷர்துல் தாக்குர் அணியில் இடம்பெற்றுள்ளார்.20 ஓவர் தொடரை இழந்த நிலையில், ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்க மேற்கிந்திய தீவுகள் அணி கடுமையாக போராடும் என எதிர்பார்க்கலாம்.

கிரிக்கெட் போட்டியையொட்டி சேப்பாக்கம் பகுதியில் நண்பகல் முதல் நள்ளிரவு வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பின் இந்த மைதானத்தில் போட்டி நடைபெற உள்ள நிலையில், மழை குறுக்கிடுமோ என ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...