‘வணங்கான்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு..!

 ‘வணங்கான்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு..!

இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகிய  ‘வணங்கான்’  திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.

சேது,  நந்தா,  பிதாமகன்,  நான் கடவுள்,  அவன் இவன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய பாலா தற்போது ‘வணங்கான்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.  அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் திரைப்படத்தில்,  ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடித்துள்ளார்.  மேலும், இயக்குநர்கள் மிஷ்கின்,  சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் மற்றும் பி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு  ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.  இப்படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

படத்தை பாலாவின் தயாரிப்பு நிறுவனமான ‘பி ஸ்டூடியோஸ்’ நிறுவனம்
தயாரித்து வருகிறது.  பெரும்பாலான படப்பிடிப்பு கன்னியாகுமரி, தி ருவண்ணாமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்றது . முன்னதாக, திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் ‘வணங்கான்’ படத்தில் சூர்யா நடிக்க முடிவு செய்து,  படத்திற்கான படப்பிடிப்பும் நடந்தது. அ ப்போது இந்த படத்தை 2டி நிறுவனம் சார்பில் சூர்யாவே தயாரித்து வந்தார்.  பிறகு, இந்த படத்தில் இருந்து விலகிக் கொள்வதாக சூர்யா மற்றும் 2டி நிறுவனம் அறிவித்தது.  இது தொடர்பான அறிவிப்பை முதலில் இயக்குனர் பாலா வெளியிட்டார்.  இதனை அடுத்து கதையின் நாயகனாக அருண் விஜய் நடிக்க ஒப்பந்தமாகி திரைப்படம் வேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது ‘வணங்கான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகியுள்ளது.  விரைவில் வெளியீடு தேதி குறித்த தகவல் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.  இதையடுத்து, படப்பிடிப்பின் நிறைவு நாளில் எடுத்துக்கொள்ளப்பட்ட படக்குழுவின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...