தைவான் நாட்டில் கடும் நிலநடுக்கம்..!

 தைவான் நாட்டில் கடும் நிலநடுக்கம்..!

தைவான் நாட்டில் இன்று அதிகாலை அதிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் இந்த நிலநடுக்கம் 7.4 ஆக பதிவாகி இருந்தது. இதனையடுத்து தைவான் நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தைவானைத் தொடர்ந்து ஜப்பானிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தைவானின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கின.

இந்த கடும் நிலநடுக்கத்தால் தைவானில் பல மாடி கட்டிடங்கள் சீட்டுக் கட்டுகளைப் போல சரிந்து விழுந்தன. இதனால் பெரும் பதற்றம் தைவானில் நிலவுகிறது. பொதுமக்கள் உயிருக்கு அஞ்சி வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். தைவானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல ஜப்பானின் தென் பகுதி ஒகினாவா தீவையும் தைவான் நிலநடுக்கத்தால் ஏற்படும் சுனாமி அலைகள் தாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் 2.3 மீட்டர் உயரத்துக்கு சுனாமி அலைகள் தாக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...