இன்றைய ராசி பலன்கள் ( மே 04 சனிக்கிழமை 2024 )

 இன்றைய ராசி பலன்கள் ( மே 04 சனிக்கிழமை 2024 )

தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் மே 04ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

குரோதி வருடம் சித்திரை மாதம் 21 ஆம் தேதி சனிக்கிழமை 4.05.2024 சந்திர பகவான் இன்று கும்ப ராசியில் பயணம் செய்கிறார். இன்று மாலை 06.10 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி.இன்று இரவு 07.49 வரை பூரட்டாதி. பின்னர் உத்திரட்டாதி.புனர்பூசம் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷ ராசி அன்பர்களே!

இன்று தொடங்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் நீண்டநாள் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உற்சாகமும் பெருக்கெடுக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். இளைய சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். முருகப்பெருமானை வழிபடுவது நன்று.

ரிஷப ராசி அன்பர்களே!

செயல்களில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் தாயின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். தாயாரின் தேவைகளை மகிழ்ச்சி யுடன் நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு பணவரவு இருந்தாலும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. குடும்ப விஷயமாக முக்கிய முடிவு எடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். சகோதரர்களு டன் ஏற்பட்ட மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும். சிவபெருமானை வழிபடுவது சிறப்பு.

மிதுன ராசி அன்பர்களே!

பிற்பகலுக்குமேல் தொடங்கும் முயற்சிகள் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணை கேட்பதை வாங்கித் தந்து மகிழ்விப்பீர்கள். உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சி ஒன்று ஏற்பாடாகும். சிலருக்கு வீண் அலைச்சலுடன் உடல் அசதியும் ஏற்படக்கூடும். பிற்பகலுக்கு மேல் சோர்வு நீங்கி உற்சாகம் பெறுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் கனிவான அணுகுமுறை அவசியம். இன்று விநாயகரை வழிபடுவது நற்பலன்களை அதிகரிக்கும்.

கடக ராசி அன்பர்களே!

முற்பகலில் மனதில் இனம் தெரியாத சோர்வு ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைப்பது தாமதமாகும். ஆனால், நண்பர்கள் உங்கள் தேவையை அறிந்து செய்யும் உதவி ஆறுதல் தரும். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதில் சில சிரமங்கள் ஏற்படும். பிற்பகலுக்கு மேல் குழப்பங்கள் மெல்ல மெல்ல விலகும். வியாபாரத்தில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். மகாவிஷ்ணுவை வழிபடுவது நன்று.

சிம்ம ராசி அன்பர்களே!

அதிகாலை முதலே நிதானம் தேவை. புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு குடும்பம் தொடர்பான பணிகளுக்காக சற்று அலைச்சல் ஏற்படும். சில ருக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிற்பகலுக்குமேல் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். வியா பாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். சிவபெருமானை வழிபடுவது நன்று.

கன்னி ராசி அன்பர்களே!

சகோதரர்களின் தேவைகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள். மாலையில் நீண்ட நாள்களாக நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். பிற்பகலுக்கு மேல் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம். இன்று நீங்கள் தொடங்கும் காரியம் சாதகமாக முடியும். வியாபாரத்தில் பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. விநாயகர் வழிபாடு நலம் சேர்க்கும்.

துலா ராசி அன்பர்களே!

திடீர் செலவுகள் ஏற்படும். தேவையான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை. மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும். நரசிம்மர் வழிபாடு சிறப்பு.

விருச்சிக ராசி அன்பர்களே!

காரியங்களில் அனுகூலம் உண்டாகும் நாள். தந்தை வழியில் ஆதாயம் கிடைப்பதுடன் செலவுகளும் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். திடீர் செலவு களும் ஏற்படும். முருகப்பெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

தனுசு ராசி அன்பர்களே!

மனதில் தன்னம்பிக்கையும் உற்சாகமும் அதிகரிக்கும். எதிர்பார்த்த காரியங்கள் அனுகூல மாக முடியும். சகோதரர்களால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வீட்டுப் பராமரிப்புப் பணி களில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். தந்தையுடன் ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்கும். இளைய சகோதரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிப்பது உற்சாகம் தரும். ஆஞ்சநேயரை வழிபட நன்மைகள் கூடுதலாகும்.

மகர ராசி அன்பர்களே!

சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சிலருக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். வெளியில் செல்லும்போது கவனமாக இருக்கவும். மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்யவேண்டாம். எதிரி கள் வகையில் எச்சரிக்கை தேவை. நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைப்பதுடன் செலவுகளும் அதிகரிக்கும். பைரவர் வழிபாடு நன்று.

கும்பராசி அன்பர்களே!

குடும்பத்தில் தாய்வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி வந்து சேரும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிகளுக்கு ஒத்துழைப்புத் தருவார். அவர் மூலம் உங்களுக்குத் தேவையான உதவிகளும் கிடைக்கும். தந்தை யுடனும் தந்தைவழி உறவினர்களுடனும் வீண் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். அக்கம்பக்கத் தில் இருப்பவர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத் தான் இருக்கும். இன்று நீங்கள் அம்பிகையை வழிபடுவது நன்று.

மீனராசி அன்பர்களே!

மன உறுதியுடன் செயல்படுவீர்கள். செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். பிற்பகலுக்கு மேல் உறவினர்களால் குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தவும். வியாபாரத்தில் பணியாளர் களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். தட்சிணாமூர்த்தியை வழிபட தடைகள் விலகும்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...