வரலாற்றில் இன்று ( 04.05.2024)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

மே 4 கிரிகோரியன் ஆண்டின் 124 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 125 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 241 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1471 – ரோசாப்பூப் போர்கள்: இங்கிலாந்தின் நான்காம் எட்வர்டு மன்னர் டாக்சுபரியில் நடந்த சமரில் வேல்சு இளவரசர் எட்வர்டைக் கொலை செய்தார்.
1493 – திருத்தந்தை ஆறாம் அலெக்சாண்டர் புதிய உலகை எசுப்பானியாவுக்கும் போர்த்துக்கலுக்கும் பிரித்துக் கொடுத்தார்.
1626 – டச்சு நாடுகாண் பயணி பீட்டர் மினூயிட் புதிய நெதர்லாந்தை அடைந்தார்.
1776 – றோட் தீவு ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ் மன்னருடனான தொடர்புகளை அறுத்த முதலாவது அமெரிக்கக் குடியேற்ற நாடானது.
1799 – நான்காம் ஆங்கிலேய மைசூர் போர்: சீரங்கப்பட்டிண முற்றுகை (1799): திப்பு சுல்தான் கொல்லப்பட்டதை அடுத்து ஸ்ரீரங்கப்பட்டணம் பிரித்தானியரின் கீழ் வந்தது.
1814 – பிரான்சின் முதலாம் நெப்போலியன் எல்பா தீவுக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில், தீவின் போர்ட்டோபெராயோ நகரை வந்தடைந்தான்.
1814 – எசுப்பானியா முழுமையான முடியாட்சிக்கு மாறியது.
1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அலபாமா, மிசிசிப்பி, மற்றும் கிழக்கு லூசியானாவில் கூட்டமைப்புப் படைகள் சரணடைந்தன.
1886 – ஹேமார்க்கெட் படுகொலை: சிகாகோவில் இடம்பெற்ற தொழிலாளர் கலகத்தில் காவல்துறையினர் மீது எறியப்பட்ட குண்டுவீச்சுக்குப் பின் இடம்பெற்ற காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டனர். 60 பேர் காயமடைந்தனர்.
1904 – பனாமா கால்வாய் கட்டுமானம் ஐக்கிய அமெரிக்காவினால் ஆரம்பிக்கப்பட்டது.
1912 – ரோட்சு என்ற கிரேக்கத் தீவை இத்தாலி கைப்பற்றியது.
1919 – மே நான்கு இயக்கம்: சீனாவின் பிராந்தியங்கள் சப்பானுக்கு வழங்கப்பட்ட வெர்சாய் ஒப்பந்தத்தை எதிர்த்து தலைநகர் பெய்ஜிங்கில் தியானன்மென் சதுக்கத்தில் மாணவர் போராட்டம் இடம்பெற்றது.
1926 – ஐக்கிய இராச்சியத்தில் பொது வேலை நிறுத்தம் ஆரம்பமானது.
1930 – மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு யெராவ்தா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பான் முதல் நாள் கைப்பற்றிய துளகி தீவு மீது அமெரிக்கக் கடற்படையினர் தாக்குதலைத் தொடுத்தனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் ஆம்பூர்க் நகரில் இருந்த நியூவென்காம் வதை முகாமை பிரித்தானிய இராணுவத்தினர் விடுவித்தனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: வடக்கு செருமனி பிரித்தானியாவிடம் சரணடைந்தது.
1949 – அகில மலாயா தொழிற்சங்க சம்மேளத்தின் தலைவராக இருந்த எஸ். ஏ. கணபதி மலாயாவின் ஆட்சியாளர்களான பிரித்தானியர்களால் கோலாலம்பூர், புடு சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார்.
1949 – இத்தாலியில் இடம்பெற்ற விமான விபத்தில் டொரினோ உதைபந்தாட்ட அணியின் அனைத்து விளையாட்டு வீரர்களும் கொல்லப்பட்டனர்.
1953 – ஏர்னெஸ்ட் ஹெமிங்வே கிழவனும் கடலும் என்ற புதினத்துக்காக புலிட்சர் பரிசு பெற்றார்.
1959 – முதலாவது கிராமி விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
1970 – வியட்நாம் போர்: அமெரிக்காவில், ஒகையோ மாநிலத்தில் கெண்ட் அரசுப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை அடுத்து, பாதுகாப்புப் படையினர் சுட்டதில் நான்கு மாணவர்கள் கொல்லப்பட்டனர், 9 பேர் காயமடைந்தனர்.
1978 – தென்னாப்பிரிக்க பாதுகாப்புப் படைகள் தெற்கு அங்கோலாவில் சுவாப்போ இயக்க முகாம் ஒன்றைத் தாக்கி 600 பேரைக் கொன்றனர்.
1979 – மார்கரெட் தாட்சர் ஐக்கிய இராச்சியத்தின் முதலாவது பெண் பிரதமரானார்.
1982 – போக்லாந்து போர்: பிரித்தானியாவின் செஃபீல்டு போர்க்கப்பல் அர்கெந்தீனா ஏவுகணைத் தாக்குதலுக்கிலக்காகியதில் 20 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
1990 – லாத்வியா சோவியத் ஒன்றியத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராக மீண்டும் விடுதலையை அறிவித்தது.
1994 – இசுரேல் பிரதமர் இட்சாக் ரபீனுக்கும், பலத்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசிர் அரஃபாத்துக்கும் இடையில் எட்டப்பட்ட அமைதி உடன்பாட்டின்படி காசாக்கரை, மற்றும் எரிக்கோவில் பாலத்தீனர்களுக்கு தன்னாட்சி உரிமை வழங்கப்பட்டது.
2002 – நைஜீரியாவில் உள்ளூர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 148 பேர் உயிரிழந்தனர்.
2014 – நைரோபியில் பேருந்துகளில் குண்டுகள் வெடித்ததில் 3 பேர் கொல்லப்பட்டனர், 62 பேர் காயமடைந்தனர்.

பிறப்புகள்

1649 – சத்திரசால், இந்திய ஆட்சியாளர் (இ. 1731)
1767 – தியாகராஜர், கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர் (இ. 1847)
1777 – லூயி ஜாக் தெனார், பிரான்சிய வேதியியலாளர் (இ. 1857)
1825 – தாமசு என்றி அக்சுலி, ஆங்கிலேய உயிரியலாளர் (இ. 1895)
1922 – யுஜினி கிளார்க், அமெரிக்க உயிரியலாளர் (இ. 2015)
1928 – ஓசுனி முபாரக், எகிப்தின் 4வது அரசுத்தலைவர்
1929 – திக்கிரி அபேயசிங்க, இலங்கை சிங்கள வரலாற்றாளர் (இ. 1985)
1929 – ஆட்ரி ஹெப்பர்ன், பிரித்தானிய நடிகை (இ. 1993)
1940 – ராபின் குக், அமெரிக்க மருத்துவர், எழுத்தாளர்
1942 – சாம் பிட்ரோடா, இந்திய தொழில் முனைவாளர், கண்டுபிடிப்பாளர்
1945 – என். ராம், இந்திய இதழியலாளர்
1958 – கெய்த் ஹேரிங், அமெரிக்க ஓவியர் (இ. 1990)
1965 – சம்பிக்க ரணவக்க, இலங்கை அரசியல்வாதி
1981 – அலெக்சாண்டர் கெரென்சுகி, உருசிய அரசியல்வாதி (இ. 1970)
1983 – திரிசா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

இறப்புகள்

1799 – திப்பு சுல்தான், மைசூர் பேரரசர் (பி. 1750)
1912 – நெட்டி இசுட்டீவன்சு, அமெரிக்க மரபணுவியலாளர் (பி. 1861)
1949 – எஸ். ஏ. கணபதி, மலாயா தொழிற்சங்கத் தலைவர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1925)
1972 – காயிதே மில்லத், தமிழக முசுலிம் அரசியல் தலைவர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1896)
1980 – சோசப்பு பிரோசு டிட்டோ, யுகோசுலாவியாவின் 1-வது அரசுத்தலைவர் (பி. 1892)
2011 – கி. கஸ்தூரிரங்கன், தமிழக இதழாளர், எழுத்தாளர் (பி. 1933)

சிறப்பு நாள்

பன்னாட்டுத் தீயணைக்கும் படையினர் நாள்
இறந்தவர்கள் நினைவு நாள் (நெதர்லாந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!