ஏ.பி. நாகராஜன் அவர்களின் பிறந்தநாள் இன்று. ( பிப்ரவரி 24 )

இயக்குனர் திரை எழுத்தாளர் ஏ.பி. நாகராஜன் அவர்களின் பிறந்தநாள் இன்று. ( பிப்ரவரி 24 )

அவரது இயக்கத்தில் வெளிவந்த திருவிளையாடல், சரஸ்வதி சபதம், தில்லானா மோகனாம்பாள் எல்லாம் மறக்கக்கடிய படங்களா?

கந்தன் கருணை , அகத்தியர், சம்பூர்ண ராமாயணம் என இருபதுக்கும் மேற்பட்ட படங்களின் மூலமாக புராண இதிகாசங்களுக்குத் திரை வடிவம் கொடுத்தவர்.

வட்டார வழக்கை முதன் முதலாக ‘மக்களைப் பெற்ற மகராசி’ யில் பேச வைத்தவர்.

இயக்குனர்,தயாரிப்பாளர், நடிகர் என நட்சத்திர அந்தஸ்தோடு ஒளி வீசியவர்.

அவரது இலக்கியப் புலமையும் , ஜனரஞ்சகத் தன்மையும், நகைச் சுவை உணர்வும் வியக்கவைக்கக் கூடியது.

வசன இலக்கியத்தில் வரலாறு படைத்த அந்த மகத்தான கலைஞனின் பிறந்த நாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன்.
*
பிருந்தா சாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!