விஷவாயு தாக்கி தொழிலாளி பலி

விஷவாயு தாக்கி தொழிலாளி பலி

          கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மேலக்காவிரி பகுதியை சேர்ந்தவர் கமல்பாட்ஷா(55). இவர் நகராட்சி தனியார் ஒப்பந்ததாரரிடம் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கும்பகோணம் ரயில் நிலையம் சாலையில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டதாக புகார் வந்தது. அதன் பேரில் பராமரிப்பு பணிக்காக ஊழியர்கள் சென்றனர். விபுத்ரன், வீரமணி, பாக்யராஜ், கமல்பாட்ஷா ஆகியோர் நேற்று(நவ.,14) மாலை 4 மணியளவில் பராமரிப்பு பணியை துவங்கினர். கமல் பாட்ஷா மட்டும், துப்புரவு பணியில் ஈடுபட்டார். மற்றவர்கள டீ அருந்த சென்றனர். அப்போது விஷவாயு தாக்கியதில் மயக்கமடைந்து சாக்கடைக்குள் விழுந்தார். மற்றவர்கள் வந்து பார்த்த போது, கமல் பாட்ஷா மூச்சுத்திணறி இறந்தது தெரியவந்தது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் வந்து உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!