ரஜினி ரசிகர்கள் கவலை

 ரஜினி ரசிகர்கள் கவலை

, இதுவும் ‘அது’ மாதிரி ஆகிவிடப் போகுது: ரஜினி ரசிகர்கள் கவலை.

        இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் வெளியிட்டுள்ள ட்வீட்டை பார்த்து ரஜினி ரசிகர்களுக்கு கவலை ஏற்பட்டுள்ளது.

       ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் தர்பார். ஷூட்டிங் முடிந்த நிலையில் இன்று டப்பிங் பணிகள் துவங்கியுள்ளது. தர்பார் குறித்து ஏதாவது அப்டேட் கிடைக்காதா என்று ரஜினி ரசிகர்கள் ஏங்குவதால் முருகதாஸ் டப்பிங் துவங்கியதை ட்விட்டரில் தெரிவித்தார்.

முருகதாஸின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

          சூப்பர், வாழ்த்துக்கள். பார்த்து இருந்து கொள்ளுங்கள். டப்பிங் தியேட்டரில் இருந்து ஏதாவது வீடியோக்கள், புகைப்படங்கள் கசிந்து விடப் போகிறது. சம்பள பாக்கியால் நயன்தாரா கடைசி நாள் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லையே.

      சம்பள பிரச்சனை தீர்ந்துவிட்டதா, அவர் டப்பிங் பேசுவாரா இல்லை வேறு யாரையாவது வைத்து வேலையை முடித்துவிடுவீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

தர்பார் படத்தின் போட்டோஷூட் துவங்கியதில் இருந்து புகைப்படங்கள், வீடியோக்கள் தொடர்ந்து கசிந்து வந்தன. முருகதாஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்த போதிலும் இப்படி நடந்தது. படக்குழுவை சேர்ந்த யாரோ தான் இந்த சம்பவத்திற்கு பின்னால் இருப்பதாக பேசப்படுகிறது.

இந்நிலையில் தான் ரஜினி ரசிகர்கள் முருகதாஸை எச்சரிக்கையுடன் இருக்குமாறு வலியுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தர்பார் படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது. அதே பண்டிகையையொட்டி தனுஷின் பட்டாஸ் படத்தையும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

ஆக, வரும் பொங்கல் மாமா, மருமகன் மோதும் பொங்கல் என்றும் வைத்துக் கொள்ளலாம் இல்லை என்றால் இருவரும் சேர்ந்து வரும் பொங்கல் என்றும் கூறலாம்.

 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...