மழைக்கு குடை ..முதலமைச்சர்

 மழைக்கு குடை ..முதலமைச்சர்

மழைக்கு குடை ..முதலமைச்சர்  

மிழகத்திற்கு நேரடியாக மழைப்பொழிவை வாரி வழங்கும் வடகிழக்கு பருவமழை கடந்த 16ஆம் தேதி தொடங்கியுள்ளது. இதையடுத்து பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.

மேலும் அண்டை மாநிலங்களில் பெய்யும் மழை காரணமாக, தமிழகத்திற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நடப்பாண்டில் மேட்டூர் அணை மூன்றாவது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

சமீபத்தில் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டது. இதனால் மிக மிக கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் உஷாராக இருக்க அறிவுறுத்தப்பட்டது.



இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில், தென்மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு திசை நோக்கி நகர்கிறது.

அரபிக்கடல் பகுதியிலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து நிலவுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புண்டு. சென்னையில் லேசான மழை பெய்யக் கூடும். கடந்த இரண்டு நாட்களை விட, அடுத்த 2 நாட்கள் மழையின் அளவு குறைந்து காணப்படும் என்று தெரிவித்தார்.


இந்த சூழலில் மழைக்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய மீட்பு பணிகள் குறித்து அதிகாரிகள், அமைச்சர்கள் உடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினர்.

இதன் தொடர்ச்சியாக சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசுகையில், வடகிழக்கு பருவமழையை திறம்பட எதிர்கொள்வோம். அதற்கு தமிழக அரசு தயாராக இருக்கிறது. இதுதொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இரண்டு ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.


வெள்ளம் வருவதற்கு முன்பு, வெள்ளம் ஏற்படும் போது, ஏற்பட்ட பின்பு என மூன்று காலங்களிலும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை வழங்கி உள்ளார். பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...