கட்சி இல்லை ரஜினி

 கட்சி இல்லை ரஜினி

கட்சி இல்லை  ரஜினி 

க்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி விழா நடைபெற இருப்பதால் அதற்காக தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் பெருமக்களை முக்குலத்தோர் புலிப்படை சார்பாக கருணாஸ் இன்று அழைத்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் அவரைச் சந்தித்துவிட்டு வெளியே வந்த கருணாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார்

அப்போது தேவர் ஜெயந்தி 112ஆவது குருபூஜை விழாவுக்கு வருகை தருவதாக முதலமைச்சர் உறுதியளித்ததாக கருணாஸ் தெரிவித்தார். உள்ளாட்சி தேர்தல் குறித்துப் பேசும்போது முக்குலத்தோர் புலிப்படைக்கு உரிய அங்கீகாரம் அளித்தால் வரும் உள்ளாட்சித் தேர்தலில் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக கூறினார்.



அதே நேரத்தில் தான் இப்போதும் சசிகலாவின் விசுவாசி என்பதை கருணாஸ் குறிப்பிட்டார். சிறையில் உள்ள அவர் மீது மேலும் அன்னிய செலவானி வழக்கை சுமத்தி தண்டிக்க பார்க்கின்றனர் எனக் கூறினார்.

ரஜினியின் அரசியல் வருகை பற்றி பேசிய அவர், “ரஜினியுடன் குறுகிய கால பழக்கம் மட்டுமே இருந்தாலும் நெருங்கிப் பழகியுள்ளேன். அவர் தனியாக கட்சி தொடங்குவாரே ஒழிய வேறு ஒரு கட்சியில் இணையமாட்டார்” என்று தெரிவித்தார்

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...