ஒருபக்கம் சித்தி-2 , மறுபக்கம் கலர்ஸ் டிவியில் கோடீஸ்வரி ரியாலிlட்டி ​ஷோ கலக்கும் நடி​கை ராதிகா

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் அக்டோபர் 28 முதல் தினமும் இரவு 8 மணிக்கு கோடீஸ்வரி என்ற பெண்களுக்கான கேம் ஷோவை நடிகை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்குகிறார். சந்திரகுமாரி சீரியல் எதிர்பார்த்த அளவு மக்களை கொண்டு சேராததால் மிகுந்த மனவருத்தத்தில் சின்னத்திரையில் இருந்து பிரேக் எடுத்த அவரின் அடுத்த பிரவேசம் தான் கோடீஸ்வரி நிகழ்ச்சி.

2000ம் ஆண்டு ராடன் மீடியா தயாரித்த கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் சரத்குமார் பங்குபெறும் போது தான் அவர்களுக்குள் திருமண பந்தம் நடந்தது. புதிய ஒரு கோணத்தில் ராதிகாவைக் காணலாம்

தொலைக்காட்சி தொடர் ரசிகர்களுக்கு இன்னொரு செய்தி ராதிகாவின் சீரியல்களில் என்றும் மனதில் நிற்பது சித்தி தான். ஸ்ரீரங்கம் கோவிலின் காட்சியில் அந்த யானையின் தோற்றமும், நித்தியஸ்ரீயின் வெண்கலக் குரலும் கேட்காத வீடுகளே இல்லையெனலாம். விரைவில் சித்தி – 2 சன்டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. நடிகர்கள் தேர்வு, கதையோட்டம் எல்லாம் முடிந்த நிலையில் சித்தி -2 யை தரிசிக்க தயாராகுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!