எத்தியோப்பியா பிரதமர் – நோபல் பரிசு!

 எத்தியோப்பியா பிரதமர் – நோபல் பரிசு!

எத்தியோப்பியா பிரதமர் அபய் அகமது அலிக்கு, அமைதிக்கான நோபல் பரிசு!

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி, ஆல்பிரட் நோபல் நினைவாக, பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு, ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. 

இந்த ஆண்டுக்கான வேதியியல், இயற்பியல் மற்றும் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று (அக்., 11) அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பியா பிரதமர் அபய் அகமது அலிக்கு வழங்கப்படுவதாக விருது குழுவினர் அறிவித்துள்ளனர். அண்டை நாடான எரித்ரியாவுடானான சிக்கலான எல்லை பிரச்னையை தீர்த்ததற்காகவும், அமைதியை ஏற்படுத்தவும், சர்வதேச ஒத்துழைப்புக்காக அவரின் முயற்சிக்காகவும் , அகமது அலிக்கு விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...