வட மாநில வாலிபருக்கு ஆயுள் முடிந்தது

 வட மாநில வாலிபருக்கு ஆயுள் முடிந்தது

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலம் இரு பிரிவுகளாக அமைக்கப்பட்டிருக்கிறது. ஒன்று எல்லீஸ்நகர் பகுதிக்கும், மற்றொன்று மாப்பாளையம் கொடைக்கானல் செல்லும் புறவழிச்சாலையை இணைக்கும் பிரிவு.


இந்நிலையில், இன்று காலை எல்லீஸ்நகர் பகுதி பிரிவு அருகே வடமாநில இளைஞர் ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை ஒரு கும்பல் சத்தமிட்டு அழைத்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் அழைப்பைக் கண்டுகொள்ளாமல் அந்த வடமாநிலத்தவர் நடந்து சென்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து அந்த கும்பல், வடமாநிலத்தவரை விரட்டி சென்றுள்ளது. சற்று நேரத்தில் அங்கிருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. மக்கள் சத்தம் வந்த இடத்தை நோக்கிச் சென்று பார்த்தபோது, அங்கு அந்த இளைஞர் ரத்த வெள்ளத்தில் உயிர் பிரிந்தது.

இதையடுத்து அப்பகுதியினர் எஸ் எஸ் காலணி காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், அங்கு இறந்துகிடந்தவர் அருகே சோதனை செய்தபோது, பட்டாக்கத்தி ஒன்று கிடந்தது.

எதற்காகக் கொலை நடந்தது, வடமாநில இளைஞருக்கும் கொலை செய்த கும்பலுக்கும் என்ன தொடர்பு என்பது குறித்து எஸ் எஸ் காலணி காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்தவர்கள் எல்லீஸ்நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...