பெண்ணே !

பெண்ணே

பால் குளத்தில் விழ்ந்த திராட்சையாய்

உன் கண்ணில் மிதக்கிறேனடி பெண்ணே

 

உன் சுவாசம் தீண்டும் காற்று மற்றும்

வாசனைத் திரவியமாய் மணக்குதடி பெண்ணே

 

தமிழில் நிறைய வார்த்தைகள் உள்ளதென்று

மௌன மொழி பேசும் இதழுக்கு சொல்லடி பெண்ணே

 

நெருப்புத் துண்டாய் இருக்கும் உன் இதழின் கனல்

என் இதயத்தில் தீ முட்டுதடி பெண்ணே

 

உள்ளம் உருகி உயிர் கரைந்தாலும்

என் இதய சுவரின் உயிர் சித்திரம் நீயடி பெண்ணே

 

உன் கொலுசின் இசையோடு

என் உயிர் துடிப்பை இணைத்துக் கொள்ளடி பெண்ணே

 

உன் பாதம்யெல்லாம் இசை சந்தமாய்

காலமெல்லாம் உடன் வருவேனடி பெண்ணே !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!