மாடியில் சிறுமிக்கு நேர்ந்த படுபயங்கரம்!

 மாடியில் சிறுமிக்கு நேர்ந்த படுபயங்கரம்!

மாடியில் சிறுமிக்கு நேர்ந்த படுபயங்கரம்!


 நாட்டின் தலைநகர் டெல்லி அருகே குர்கானில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் லிஃப்ட் பொறியாளராக பணியாற்றியவர் அருண் சர்மா. இவர் மிக இளவயதில் இருப்பதால், அனைவரிடமும் நன்கு பழகியுள்ளார்.


இதேபோல் அங்கு வசித்து வரும் 14 வயது சிறுமியிடமும் சகஜமாக இருந்துள்ளார். இதையடுத்து சிறுமியும் பொறியாளரிடம் நன்கு பேசி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி அன்று, சிறுமி விளையாடிக் கொண்டு லிஃப்ட் அருகே வந்துள்ளார்.


அப்போது சிறுமியை அருண் அழைத்துள்ளார். பரிசுப் பொருள் தருவதாக கூறி மாடிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனால் மிகுந்த அதிர்ச்சி அடைந்த சிறுமிக்கு, கருத்தடை மாத்திரையை கட்டாயப்படுத்திக் கொடுத்துள்ளார். இந்த விஷயத்தை வெளியில் யாரிடமும் சொல்லக் கூடாது. மீறி சொன்னால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.


இதனைத் தொடர்ந்து சிறுமியால் சரியாக நடக்க முடியவில்லை. மிகவும் தடுமாறி, தடுமாறி மாடிப் படியில் இருந்து இறங்கியுள்ளார். இதனை அங்கு வசித்து வரும் குடியிருப்புவாசிகள் கவனித்துள்ளார்.

உடனே இதுபற்றி சிறுமியின் தாயிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சிறுமி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை உறுதி செய்தனர். இதுகுறித்து சிறுமியின் தாய் போலீசில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து, அருண் சர்மாவை கைது செய்தனர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...