மகளைக் காணவில்லை எனத் தேடிக் கொண்டிருந்த சிறுமியின் தாய்

 மகளைக் காணவில்லை எனத் தேடிக் கொண்டிருந்த சிறுமியின் தாய்

மகளைக் காணவில்லை எனத் தேடிக் கொண்டிருந்த சிறுமியின் தாய் 

காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலத்தை அடுத்த புது நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால். இவருக்கு 16 வயதில் ஒரு மகன் உள்ளான். இவன் மாங்காடு பகுதியில் உள்ள மெக்கானிக் கடையில் வேலை பார்த்து வருகிறான். இந்நிலையில் கடைக்கு இரண்டு நாட்கள் விடுமுறை விடப்பட்டதால் புது நல்லூர் கிராமத்துக்கு வந்துள்ளான்.



அதே பகுதியில் ஆட்டோ ஓட்டுனர் ஆறுமுகம் என்பவரின் 5 வயது சிறுமி விளையாடிக்கொண்டிருந்தாள். அந்த சிறுமியைப் பாட்டு கேட்கலாம் வா என அழைத்த சிறுவன் எதிரில் உள்ள உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்று சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளான்.

இதனையடுத்து மகளைக் காணவில்லை எனத் தேடிக் கொண்டிருந்த சிறுமியின் தாய் அச்சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்து சிறுமியை மீட்டிருக்கிறார். இதனையடுத்து உடனே தனது மகளைச் செங்கல்பட்டு அரசு மருத்துவ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்குச் சிகிச்சையும் பார்த்துள்ளார்.

சம்பவத்தை குறித்து சிறுமியின் பெற்றோர்கள் ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையொட்டி 16 வயதுடைய சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...