சுபஸ்ரீ வீட்டிற்கு வந்த கூரியர்

சுபஸ்ரீ வீட்டிற்கு வந்த கூரியர்

சட்ட விரோதமாக வைக்கப்பட்ட பேனர் சரிந்து விழுந்து லாஅரி மோது இளம்பெண் சுபஸ்ரீ செப்டம்பர் 12ஆம் தேதி உயிரிழந்தார். இந்த மரணத்துக்கு காரணமான அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெய கோபால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். கொடி, பேனர் அமைத்த நால்வர் கைதா

சுபஸ்ரீ மரணம்: தேடப்பட்டு வந்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் கைது.!

கடந்த இரு வாரங்களாக தமிழகம் முழுவதும் இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீக்கு வயது 23. பிடெக் படிப்பை முடித்த அவர் முதுகலைப் படிப்பை கனடா நாட்டிற்கு சென்று படிக்க திட்டமிட்டிருந்தார். செப்டம்பர் 7 மற்றும் 10ஆம் தேதி சென்னை, பிரிட்டிஷ் கல்லூரியில் ஐஐஇடி தகுதித் தேர்வு எழுதியிருந்தார். இந்தத் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே கனடாவில் முதுகலைப் படிப்பிற்கு தேர்வாக முடியும். இதன் தேர்வு முடிவுக்காக காத்திருந்தபோதே சுபஸ்ரீக்கு அந்த கோர சம்பவம் நடைபெற்றது.

சுபஸ்ரீ: போலீஸில் சிக்கிய ஜெயகோபாலுக்கு நீதிமன்ற காவல்!

இந்நிலையில் சுபஸ்ரீ வீட்டிற்கு வந்த கூரியர், அவரது பெற்றோரை மேலும் சோகத்துக்கு ஆளாக்கியது. ஐஐஇடி தகுதித் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளதாக கடிதம் வந்துள்ளது. 9 மதிப்பெண்களுக்கு 7 மதிப்பெண்கள் சுபஸ்ரீ பெற்றுள்ளார். முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளதால் கல்வி உதவித் தொகையுடன் அவருக்கு முதுகலை படிக்க இடம் கிடைத்துள்ளது. இதைப் பார்க்க தன் மகள் இல்லையே என அவரது பெற்றோர் மேலும் அழுது புலம்பியுள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!