கீறல்களுக்குப் பின்னால் ..!!

தேடல்களில் காணாத 
தேவதை அவள் ..
என் மாளிகையின் 
இளவரசி அவள் ..
தத்தித் தாவும்  
குட்டி நிலவு அவள் ..
அவள் கை மறைத்து
எட்டிப்பார்க்கும் அழகில் !
என் இதயமும் 
இரண்டொரு  நொடி
நின்று துடிக்கும்..
பிஞ்சு கரங்கள் 
வருட என் தாடியும் 
தவம் கிடைக்கும் ..
மழை மண் சேரும் 
மகிழ்வு 
அவளின் எச்சில் முத்தங்களில் …
அத்தனை முறையும்
கோமாளி ஆவேன் 
அவளின் கள்ளமில்லா சிரிப்பிற்காய்..
எங்கே அவளின் தங்க மேனி..?
 எங்கே என் தேவதை..?
அழகு மேனி
நாய்களுக்கு இரையானதோ  …?
யுத்தம் செய்கிறேன் 
நாய்களுடன் 
அவளின் முத்தங்களுக்காய்..
இறையே ஒரு விலங்கு தா ..!!
காமக்கொடூரனை
காலவரையின்றி
சிறை வைக்க ..
அவளின் இறப்பும்
சிதைப்பட்ட  உறுப்பும் 
அத்தனை அரக்கனையும்
அழிக்கட்டும் ..
அரங்கேறும் அவலங்கள் 
இல்லாதொழியட்டும் ..
அருவ(உ)றுப்புகள் 
அருபட்டு போகட்டும் ..
இது கவியல்ல
பாச தந்தையின் சகாப்தம் …..!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!