அவள்

 அவள்
கூந்தலை வடிகட்டிய பிறகும்
இறங்க மறுத்து அடர்ந்திருந்தன 
அவள் தேகமேறிய ஒன்று.

அவள் நிர்வாண உடம்பில்
உருண்டோடிய திமிரில் 
விலகிக் கொள்ள விருப்பம் இன்றி 
கூந்தலுக்குள் மறைந்திருந்து
வேடிக்கை காட்டியது
 
பருத்தி ஆடையால் கூந்தலை
போர்த்திக் கொண்டபோது
இடம் மாற மனமின்றி
பள்ளிக்கூடம் செல்ல அழுது
அடம்பிடிக்கும் மாணவனைப்
போல் 
அடம் பிடித்தது

இறுதியாக
அவள் கூந்தல் எனும்
தூக்குக் கயிறில் 
தற்கொலை செய்து கொள்ள
தயாராகி கொண்டன
அவள் உடல் ருசித்த
நீர்த்துளிகள்.


ஐரேனிபுரம் பால்ராசய்யா

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...