முதலிடத்திற்கு அடித்து கொள்ளும் பிக்பாஸ் போட்டியாளர்கள்… கோர்த்து விட்ட பிக்பாஸ்! | தனுஜா ஜெயராமன்

பிக்பாஸ் சீசன் 7 தினசரி புது புது டாஸ்க்,  புதிய அனுபவங்கள் , சண்டைகள் , சச்சரவுகள் என தினமும் மாறி மாறி நடந்து கொண்டிருக்கின்றன

நேற்று பிக்பாஸில் ரேங்கிங் டாஸ்க் கொடுக்கப்பட்டது.  இந்த ரேங்கிங் டாஸ்கில்  முதல் ரேங்க் பெறுபவர்களை தேர்வு செய்ய வேண்டும் 15ஆம் ரேங் பெறுபவர்கள்  எவிக்ஷ்னுக்கு தயாராகின்றனர் என்று சொல்லப்பட்டது.

பிரதீப் தான் சினிமா கலைஞனாக  இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்வதாகவும் முதலாம் இடத்தை யாருக்காகவும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்றும், வேண்டுமென்றால் தன்னை சாகடித்து விட்டு இந்த இடத்தை யார் வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்திருக்கின்றார். அவர் முதலிடத்துக்காக போட்டியிட மாயா அவரிடம் டைட்டில் தனக்கு வேண்டும் 50 லட்ச ரூபாயை ப்ரதீப்புக்கு தருவதாக வாக்களிக்கிறார். அதன் பிறகு ஜோவிகாவும் தனது கேரியருக்காக டைட்டில் தனக்கு வேண்டும் என சண்டையிடுகிறார். ஒரு கட்டத்தில் அவரை தகாக வார்த்தையில் திட்டியதாக சொல்லி ப்ரதீப் அந்த டாஸ்கை விட்டு வெளியே போகிறார்.

ரவீனா மணி ப்ரச்சனை இன்னமும் தீர்ந்தபாடில்லை. இதில் நிக்ஸனும் ஐஷீவும் புதியதாக ஏதோ ட்ரை பண்ணி கடுப்பேத்துகிறார்கள். பூர்ணிமா விக்ரம் விஷ்ணு என ஒரே லவ் ட்ரேக் மயமான பிக்பாஸ் வீடு. ஆனால் பார்க்கும் நமக்கு தான் கடுப்பாகிறது. ப்ரதீப் மாயா இருவரும் செம்மையாக விளையாடுவதாக ப்ரேம் பை ப்ரேம் அவர்களே சொல்லிக் கொள்கிறார்கள்.

பூர்ணிமா அவ்வப்போது புறம் பேசி காலத்தை ஓட்டுகிறார். அட்சயா ஏதோ இருக்கிறார். ஆனால் அந்த வினுஷாவோ டூர் வந்தது போல சாப்பிட்டு தூங்கி என காலத்தை கழிக்கிறார். போட்டியுல் இருக்கிறாரா?இல்லையா? என்றே தெரியாமல் நான்கு வாரமாக விளையாடி வருகிறார். விஜய் டிவி ப்ராடக்ட் என்பதால் அவருக்கு அதிக வாய்ப்பு தருவதாக தோன்றுகிறது.

அடுத்த வாரம் 5 பேர் பிக்பாஸ் சீசன் 7இல் வைல்டு கார்டாக வரவுள்ளனர். அவர்களது வருகை ஆட்டத்தை எப்படி கொண்டு போகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!