யாருடைய கட்டுபாட்டிலும் இல்லா வடசென்னை மெட்ரொ திட்டம்

 யாருடைய கட்டுபாட்டிலும் இல்லா வடசென்னை மெட்ரொ திட்டம்

2012 -2022 திட்டமோ திட்டம் இன்னும் தொடரும்.

யாரும் கண்டுகொள்ளாத ஒரே திட்டம் வடசென்னை மெட்ரொ இரயில் திட்டம்… முடிவடையா நீண்ட நெடிய இத்திட்டத்தை பற்றிய முடிவுரை தெரிய வேண்டும் என்றால் சாமானிய பொது மக்கள் கோயம்பேடு அதிகார மையத்தை அனுகி முடித்து கொள்ளளாம் என்று பகுதி அதிகாரிகள் பதில். மேலும் புதிய கான்ராக்டர் தற்போது இன்னும் சில நாட்களில் தான் பணி மேற்கொள்ள போகிறார்கள். தண்டையார்பேட்டை மெட்ரோ பணி தற்போதுக்கு முடியாது…

சாலையும் கிடையாது… பொதுமக்கள் பயன்படுத்தும் உட்புற ஊர் சாலைகள் சேணியம்மன் கோயில் தெரு, வைத்தியநாதன் தெரு, மெட்ரோ இரயில் பணி காரணமாகவே பொது போக்குவரத்துக்கு விடப்பட்டு ஆபத்து சாலையாக மாறிபோனது… எம்.எல்.ஏ. நினைத்தால் தான் உங்களுக்கு சாலை, எங்களால் பழுதான சாலைக்கு நாங்கள் பொறுப்பல்ல எந்த ஒரு விபத்திற்கு நாங்கள் பொறுப்பல்ல, சாலை ஓர தெருவிளக்கை திட்டத்திற்காகவே அகற்றப்பட்டது, தற்காலிக சாலை ஓர விளக்கும் போட முடியாது… கோயம்பேடு முடிவு போல் தான் இங்கே எல்லாம் நடக்கும்…
அதிகாரி கூற்று.

யாருடைய கட்டுபாட்டிலும் இல்லா திட்டம் வடசென்னை மெட்ரொ திட்டம்

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...