சர்வதேசத் திரைப்பட விழாவில் ஆலியா பட் நடித்த படம் தேர்வானது!

அலியா பட் மற்றும் அஜய் தேவ்கன் நடித்துள்ள சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் ‘கங்குபாய் கதியாவதி’. இந்தியில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் பிப்ரவரியில் நடக்கும் 72வது பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வு செய்யப் பட்டுள்ளது.

கங்குபாய் கதியவாடி பெர்லினில் திரைப்பட விழாவில் ஸ்பெஷல் ஒரு பகுதியாகத் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது முன்மாதிரியான சினிமாவைக் காண்பிக்க அர்ப்பணிக்கப்பட்ட திரைப்பட விழாவின் ஒரு பிரிவாகும். இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்ட படங்கள் தொற்றுநோய் காலத்தில் எடுக்கப்பட்ட படங்கள்.

சஞ்சய் லீலா பன்சாலி சினிமா உலகில் 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவரது 10வது படமான ‘கங்குபாய் கத்தியவாடி’ அவருக்கு ஸ்பெஷலாக அமைந்துள்ளது.

சஞ்சய் லீலா பன்சாலி கூறும்போது, ​​“கங்குபாய் கத்தியவாடியின் கதை என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. நானும் எனது குழுவினரும் இந்தக் கனவு படத்தைச் சாத்தியமாக்குவதற்கு உயிரைக் கொடுத்துள்ளோம். மதிப்புமிக்க பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழாவில் எங்கள் படத் தைக் காண்பிப்பதில் நாங்கள் பெருமையடைகிறோம்.

பென் ஸ்டூடியோவின் தயாரிப்பாளர் ஜெயந்திலால் கடா திரைப்படத் தேர்வு குறித்து தனது எண்ணங் களைப் பகிர்ந்து கொள்கிறார். அவர் கூறும்போது, “நான் திரு. பன்சாலி மற்றும் அவரது படைப்பை நம்புகிறேன். பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழாவில் எங்கள் படம் திரையிடப்படுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி யைத் தருகிறது. மேலும் திரு. பன்சாலியுடன் இணைவதில் பெருமிதம் கொள் கிறேன். ஆலியா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இந்தத் படத்தில் ஒரு பகுதியாக இருந்ததற்காக அஜய் தேவ்கனுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உலகளாவிய பார்வையாளர் களை  ஈர்க்கும் கதை இது.” என்றார்.

பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழாவின் கலை இயக்குநர் கார்லோ சத்ரியன் கூறுகையில், “கங்குபாய் கத்தியாவாடியைத் திரையிடுவதில் நாங்கள் மகிழ்ச்சி யடைகிறோம். மேலும் பெர்லின் திரைப்பட விழாவின் பாரம்பரியத்தை இந்திய திரைப்படங்களுக்கு ஒரு சிறப்பு அமைப்பாகத் தொடர் வதில் நாங்கள் மகிழ்ச்சி யடைகிறோம். இந்தியா மட்டுமின்றி சமூகப் பொருத்தமுள்ள விஷயத் துடன் கேமரா இயக்கத்தையும் நடனத்தையும் வடிவமைப்பதில் வழக்கமான கோணத் துக்கு மாறாகப் படம் எடுக்கப்பட்டுள்ளது.” சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் டாக்டர் ஜெயந்திலால் கடா (பென் ஸ்டூடியோஸ்) ஆகியோரால் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், 2022 பிப்ரவரி 18 அன்று திரை யரங்கு களில் வெளியிடப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!