உறங்கா இரவுகள் – ராசி அழகப்பன்

 உறங்கா இரவுகள் – ராசி அழகப்பன்

மறக்காமல் வீட்டுக்கு வாங்க என்று
பயமின்றி அழைக்கும் நேரம் என்று ?
இப்போதும் மனம் அலைபாய்கிறது…
அலைபேசியில் பாசத்தை
சொற்களாய் விதைக்கிறது
தனித்திருப்பது தவக்கோலம் !
நான் திசைகளின் காதலன்
பயணவழி நண்பன்
காலமே கவனம் கொள்….
நீண்டு கொண்டே செல்கின்றன
உறங்கா இரவுகள்
தனிமையே மா மருந்து
பசிக்குமா ?
வயல்களில் விளையும் மருந்தைப்
பரவச் செய்தால் நலம்….
பார்ப்பவரெல்லாம்
பத்திரமாய் இரு என்கிறார்கள்
உண்மைதான்…
பத்திரம் பாத்திரத்தில்
உள்ளவர்களுக்கு சரி
பாதையில் இருப்பவர்களுக்கு….!

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...