Tags :பேய் ரெஸ்டாரெண்ட்

தொடர்

பேய் ரெஸ்டாரெண்ட் – 28 | முகில் தினகரன்

அடுத்த வாரத்தில் ஒரு நாள், காலை நேரம். ரெஸ்டாரெண்ட்டில் தனது அறையில் அமர்ந்து லாப்டாப்பில் மூழ்கியிருந்தான் ஆனந்தராஜ். “என்ன நண்பா பிஸியா?” கேட்டவாறே உள்ளே நுழைந்தனர் திருமுருகனும், விஜயசந்தரும். “பிஸியெல்லாம் ஒண்ணுமில்லை!…ஆடிட்டர் ஸ்டேட்மெண்ட் அனுப்பியிருந்தார்…அதைத்தான் பார்த்திட்டிருந்தேன்” லாப்டாப்பை மூடியபடி சொன்னான் ஆனந்தராஜ். “என்ன சொல்லுது ஆடிட்டர் ஸ்டேட்மெண்ட்?” விஜய்சந்தர் கேட்க, “வழக்கம் போல் லாபக் கணக்குதான்!…அதிலும் இந்த வருஷம் போன வருஷத்தை விட இரு மடங்கு லாபம்” “வாவ்…பாராட்டுக்கள் ஆனந்த்” என்று இருவரும் சொல்ல, “டேய்…என்ன என்னை […]Read More

தொடர்

பேய் ரெஸ்டாரெண்ட் – 27 | முகில் தினகரன்

கு குணா கடிதம் எழுதிய விஷயமும், அதில் உள்ள தகவல்களும் ஏற்கனவே சுமதி அறிந்திருந்தாலும் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல், “அப்பா…உண்மையைச் சொல்லணும்ன்னா…இந்த முறை நான் எந்த வித மறுப்பும் சொல்லாமல்…எப்படிப்பட்ட மாப்பிள்ளையாய் இருந்தாலும் ஒத்துக்கறது!ன்னு முடிவு பண்ணிட்டேன்…இதற்கு மேலும் உங்களையும் அம்மாவையும் நொந்து போக விட மாட்டேன்!…அதனால தைரியமா வரச் சொல்லுங்க…முடிவே பண்ணிடலாம்” என்றாள். மகளிடமிருந்து வந்த உறுதியான சம்மதம், வேணுகோபாலுக்கு ஊக்க டானிக் பருகியதைப் போலிருக்க, அன்றே பதில் எழுதி அடுத்த தெருவிலிருந்த கூரியர் […]Read More

தொடர்

பேய் ரெஸ்டாரெண்ட் – 26 | முகில் தினகரன்

கும்பல் சென்றதும், “உங்க பேரு…குணாவா?” சுமதி கேட்டாள். அவன் “ஆமாம்”என்று தலையை ஆட்ட, “இவங்க கிட்ட எப்படி மாட்டுனீங்க?” சுமதி தலையைச் சாய்த்துக் கொண்டு கேட்டாள். அவளை ஏற இறங்கப் பார்த்த குணா, “ம்ஹும்…இவளாய் இருக்காது…ஏன்னா இவள் மஞ்சள் நிறப் புடவையல்லவா கட்டியிருக்காள்” தனக்குள் சொல்லிக் கொண்டான். “என்னங்க நான் கேட்டுக்கிட்டே இருக்கேன் நீங்க பாட்டுக்கு என்னையே பார்த்திட்டிருக்கீங்க?… என்னாச்சு உங்களுக்கு?” “அது.,..ஒரு பெரிய கதைங்க!…அதைச் சொன்னா நீங்க நம்பவும் மாட்டீங்க…கேட்டு முடிச்சதுக்கப்புறம் நீங்களும் என்னைப் பைத்தியக்காரன் […]Read More

தொடர்

பேய் ரெஸ்டாரெண்ட் – 25 | முகில் தினகரன்

அன்றே சிவகாமி பெரியம்மாவைச் சந்தித்து, தன் தாயிடம் சொன்ன அனைத்து விபரங்களையும் அட்சரம் பிசகாமல் சொல்லி முடித்த சுமதி, “எனக்கென்னமோ நிச்சயம் இந்த மெத்தேடு ஒர்க் அவுட் ஆகும்!ன்னு தோணுது பெரியம்மா” என்றாள். பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டு விட்டு, “சுமதி…என் பொண்ணு குணமடையணும் என்பதற்காக நீ எடுக்கற முயற்சிகளைப் பார்க்கும் போது எனக்கு ஒரு பக்கம் சந்தோஷமாயிருந்தாலும்.,..இன்னொரு பக்கம் சிரிப்பாயிருக்கும்மா…” என்றாள் சிவகாமி பெரியம்மா. “ஏன் பெரியம்மா அப்படிச் சொல்றீங்க?” “பின்னே என்னம்மா?…ஆவி நட்பு…அதுஇதுன்னு எதையோ பண்ணி…பேய் […]Read More

தொடர்

பேய் ரெஸ்டாரெண்ட் – 24 | முகில் தினகரன்

“என் இனிய ஆவி நண்பரே…என்ன விஷயம்?…ஏன் இந்தப் பரபரப்பு?…” கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருந்த குணாவின் உதடுகள் கேட்டன. அந்தக் கேள்விக்கான பதிலை வெள்ளைத் தாளில் எழுதித் தள்ளியது லட்சுமி நரசிம்மன் ஆவி. “அன்பரே!…தங்களுக்குப் பொருத்தமானதொரு ஜோடியைக் கண்டுபிடித்து விட்டேன்!…அவளும் தங்களைப் போலவே நல்ல தோழி!…பல தரகர்கள் அவளுக்கு வரன் தேடித் தேடி ஓய்ந்து போய் “இனி முடியாது” என்று ஒதுக்கி விட்டதால் ஆற்ற மாட்டாத சோகத்துடன் “இனி நமக்கு திருமணம் என்பது இந்த ஜென்மத்தில் இல்லை” […]Read More