Tags :பத்துமலை பந்தம்

தொடர்

அஷ்ட நாகன் – 4| பெண்ணாகடம் பா. பிரதாப்

-அமானுஷ்ய தொடர்- பாம்புகளில் ‘நாகங்கள்’ மட்டுமே தனித்தன்மை வாய்ந்தது.சக்தி மிக்கது.நாம் முதலில் பாம்புகளுக்கும் நாகத்திற்கும் உள்ள வேறுபாட்டை அறிய வேண்டியது அவசியம்.பாம்பு என்பது பொதுப்பெயர்.நாகம் என்பது சிறப்புப் பெயர். பாம்புகளில் படமெடுத்து ஆடும் பாம்புகளை மட்டுமே நாகம் என்று கூறுவர்.நாகங்களில் மூன்று வகை மட்டுமே தெய்வ சக்தி வாய்ந்தவை.அவற்றைப் பற்றி அடுத்தடுத்த அத்தியாயங்களில் விளக்கமாகக் கூறுகிறேன்.தற்போது நாகங்களில் கருநாகத்தைப் பற்றி சில செய்திகளைக் காண்போம். கருநாகத்தை ‘கிருஷ்ண சர்ப்பம்’ என்றும் கூறுவர்.நவகிரகங்களில் கருநீலமும் கருப்பு வண்ணமும் சனீஸ்வர […]Read More

தொடர்

பத்துமலை பந்தம் | 19 | காலச்சக்கரம் நரசிம்மா

19. நவத்தைத் தேடி நவவியூகங்கள்! பால்கனியில் இருந்து தான் கீழே பார்த்தபோது, போதினியும், சுபாகரும் இவர் கண்களுக்கு கந்தகோவும், காதம்பரியுமாகத் தெரிய, அதிர்ச்சியுடன் கீழே வந்து பார்த்தபோது, அவர்கள் போதினியாகவும், சுபாகராகவுமே கண்களுக்கு புலப்பட்டதைக் கண்டு வெலவெலத்துப் போயிருந்தார், நல்லமுத்து. இருப்பினும், கனிஷ்கா செய்த ஆர்ப்பாட்டத்தில், அவரது அச்சங்களும் குழப்பங்களும், பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன. ஆனால் இப்போது மயூரி கேட்ட கேள்வி, அவருக்கு மறந்திருந்த அம்சங்களை மீண்டும் தலைதூக்கச்செய்தது. “தாத்தா..! உண்மையிலேயே நாங்க உங்கள் வாரிசுகள் தானே..! இல்லே, […]Read More

தொடர்

அஷ்ட நாகன் – 3| பெண்ணாகடம் பா. பிரதாப்

-அமானுஷ்ய தொடர்- நாகங்களை கனவில் கண்டால் அந்த கனவுக்கு கண்டிப்பாக பலன் உண்டு என்று நாக சாஸ்திரம் கூறுகிறது. பொதுவாக, நாகங்களை கனவில் கண்டால் பலரும் அச்சம் அடைவர். நாகங்கள் எல்லாருடைய கண்களிலும் தென்படுவதில்லை. அவற்றைக் காண வேண்டுமென்ற விதி அமைப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே அவை புலப்படும். ஒருவரின் ஜாதகத்தில் ராகு கேது என்ற இரண்டு கிரகங்களின் பங்கு மிக முக்கியம். இந்த இரண்டு கிரகங்களும் சரியான இடத்தில் அமையும் பட்சத்தில், அவர் ராஜ பேக வாழ்க்கையை […]Read More

தொடர்

பத்துமலை பந்தம் | 18 | காலச்சக்கரம் நரசிம்மா

18.நீலி என்னும் வேலி அந்த நள்ளிரவில் நல்லமுத்து வீசிய வெடிகுண்டு, குறிஞ்சி பண்ணை வீட்டின் மாடி அறையில் குழுமி இருந்தவர்கள் இடையே பெரிய அதிர்வினை ஏற்படுத்தி, அவர்களைக் கல்லாக உறையச் செய்திருந்தது. “நான் நல்லமுத்து இல்லை. எனது பெயர் அஞ்சையா..! எனது தங்கை தேவசேனாவின் உண்மையான பெயர், ராஜகாந்தம்..!” –என்று நல்லமுத்து தங்களது உண்மையான பெயராக அந்த வீட்டைப் பார்த்துக் கொள்ளும் பணியாட்களின் பெயரைக் கூற, செல்வாக்கும், புகழும், நிரம்பிய பண வசதியால் செருக்குடன் அமர்ந்திருந்த அந்தக் […]Read More

தொடர்

அஷ்ட நாகன் – 2| பெண்ணாகடம் பா. பிரதாப்

நாக சாஸ்திரம் ! பாம்புகளைப் பற்றி பலவிதமான நம்பிக்கைகள் உண்டு. பாம்புகளில் ‘நல்ல பாம்பு’ பெரும்பாலான மக்களால் நம்பிக்கையுடன் இன்றளவும் வணங்கப்பட்டு வருகிறது. பாம்புகள் பயந்த சுபாவம் கொண்டவை. அவை, அடர்ந்த வனத்திலோ, இருளிலோ அல்லது குளிர்ச்சியான பகுதியிலோ பதுங்கி மறைந்து வாழும். ஒருவர் பாம்பை தாக்க முற்படும் போது, தப்பிக்க வழி இல்லாத காரணத்தால் தான் அப்பாம்பானது மூர்க்கமாக தாக்க முற்படும். பெரும்பாலான பாம்புகள் நஞ்சற்றவை என்பதே நிதர்சனம். சில வகையான பாம்புகள் தங்கள் இனத்தில் […]Read More

தொடர்

பத்துமலை பந்தம் | 17 | காலச்சக்கரம் நரசிம்மா

17. நான் அவனில்லை..! அந்த சனிக்கிழமை நள்ளிரவு..! சென்னை ஈசிஆரில், பாண்டிச்சேரிக்கும், மாமல்லபுரத்திற்கும், விர்….விர் என்று பைக்குகளும், கார்களும் பறந்துகொண்டிருந்தன. அவற்றில் நண்பர்களும், இளம் ஜோடிகளும் உற்சாகத்துடன் பயணித்துக் கொண்டிருந்தனர். மறுநாள் ஞாயிற்றுகிழமை விடுமுறையைக் களிப்புடன் கழிக்கப் போகிறோம் என்கிற ஆனந்தத்தில், ஆர்ப்பாட்டத்துடன் அவர்கள் சென்றுகொண்டிருக்க, கிழக்கில் சற்றுத் தள்ளி, கரிய சேலையைக் கட்டியிருந்த வங்கக் கடலின் அந்த உற்சாகத்தில் பங்குகொண்டு, அந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தனது அலைகளின் ஆப்பரிப்பால் பதிலளித்துக்கொண்டிருந்தது. இரு பக்கத்து ஆர்ப்பரிப்புகளும் தன்னை எந்த […]Read More

தொடர்

அஷ்ட நாகன் – 1| பெண்ணாகடம் பா. பிரதாப்

நாக சாஸ்திரம் ! நாக சாஸ்திரம் குறித்து நம் புராண! இதிகாசங்கள் பல இடங்களில் வெகுவாக பேசி உள்ளன. நாகங்களில் தெய்வீக சக்தி வாய்ந்த நாகங்களை ‘நாகர்’ மற்றும் ‘நாகினி’ என்று அழைப்பர். ஆண் இச்சாதாரி நாகத்தை ‘நாகர்’ என்றும். பெண் இச்சாதாரி நாகத்தை ‘நாகினி’ என்றும் கூறுவர். நாகங்களை பற்றி உலகம் முழுவதும் பலவிதமான நம்பிக்கைகள் நிலவி வருகிறது. இச்சாதாரி நாகங்கள் பாதி மனித உருவம் பாதி பாம்பு வடிவம் கொண்டவர்கள்; பாதாள லோகத்தில் வாழ்பவர்கள்: […]Read More

தொடர்

பத்துமலை பந்தம் |16| காலச்சக்கரம் நரசிம்மா

16. புகை வளையத்தினுள் குடும்பம்.! பால்கனியில் இருந்து கீழே பார்த்த நல்லமுத்துவுக்கு, கைகால்கள் போய், இதயம் வாய் வழியாக நழுவி, பால்கனியில் இருந்து கீழே விழுந்து விடுமோ என்கிற நிலை ஏற்பட்டு விட்டது. தன்னைச் சுதாரித்துக்கொண்டு, அறைக்குத் திரும்பியவர், கைத்தடியை எடுத்துக்கொண்டு, சட்டையை அணிந்திராத தனது மார்பை மூடுமாறு ஒரு சால்வையை எடுத்துப் போர்த்திக்கொண்டு கீழே நடந்தார். அவர் பால்கனியில் இருந்து பார்த்தபோது அவர் கண்களுக்குத் தென்பட்டது கடம்பனும் ஸ்ரீவள்ளியும். இவ்வளவு காலங்களுக்குப் பிறகு திடீர் என்று […]Read More

தொடர்

பத்துமலை பந்தம் | 15 | காலச்சக்கரம் நரசிம்மா

15. வண்டவாளம் தண்டவாளத்தில்..! மனிதனின் குழந்தைப் பருவம் ஓடி விளையாடும் பருவம். பறவைகளாகப் பறந்து திரிந்து, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று உற்சாகத்துடன் வளைய வரும் வயது. குமார பருவம், இயற்கை உடலில் உண்டாக்கும் மாற்றங்களை வியப்புடன் ஏற்று, விடலை எண்ணங்களுடன், பொழுதைக் கழிக்கும் பருவம். வாலிபப் பருவம், உள்ளத்துக்கு இனிமையை அள்ளித்தரும் தனக்கு உற்ற ஜோடியை தேர்ந்தெடுத்து, கைகோர்த்துக் காதல் பாதையில் பவனி வரும் வயது. அதுவரையில் மலர்கள் இறைக்கப்பட்ட பாதையில் நடந்து வந்த அந்த […]Read More

தொடர்

பத்துமலை பந்தம் | 14| காலச்சக்கரம் நரசிம்மா

14. கிராதக குடும்பம்..! மிதுன் ரெட்டி யின் உயிர், கொடைக்கானல் மலையின் நம்பிக்கை விளிம்பில் ஊசலாடிக்கொண்டிருந்த போது, சரியாக மயூரியின் ஹோட்டல் நம்பருக்கு போன் வந்தது. அழைத்தவன் குகன்மணி. “மயூரி..! நான் குகன்மணி பேசறேன். ஒரு சின்ன ஹெல்ப்..! தமிழ் ஆக்டர் மிதுன் ரெட்டியோட போன் நம்பர் எனக்கு அர்ஜெண்டா வேண்டும். கோலாலம்பூர்ல நடக்கிற ஒரு நட்சத்திர இரவு விஷயமா அவர்கிட்டே உடனே பேசணும்..! எனக்குக் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்களேன்..! ப்ளீஸ்..!” –குகன்மணி கேட்க, மயூரி யோசித்துவிட்டு, […]Read More