Tags :ஆன்மீக மர்மத் தொடர்

தொடர்

அஷ்ட நாகன் – 6| பெண்ணாகடம் பா. பிரதாப்

-அமானுஷ்ய தொடர்- நாக சாஸ்திரத்தின் மூலம் நாகங்கள், நம் கனவில் வந்தால் என்னென்ன பலன்கள் ஏற்படும் என்பதை பார்த்து வருகிறோம்.நம் புராண, இதிகாசத்தின் படி உற்று நோக்கினால் ஒவ்வொரு தெய்வத்துடனும் நாகங்கள் இணைப்பில் உள்ளதை உணரலாம்.பாம்புகள்,தன் தோலை உரிக்கும் தன்மை உடையதால், அவை அமரத்தன்மை வாய்ந்தவை என்று நம்பப்படுகிறது.இந்து மதக் கோட்பாட்டின் படி மும்மூர்த்திகளின் உருவத்திலும் பாம்பின் அடையாளங்களைக் காணலாம்‌‌.குறிப்பாக, சிவ பெருமானால் பாம்புகள் நேசிக்கப்பட்டன; ஆசிர்வதிக்கப்பட்டன என்பது மிகப்பழமையான நம்பிக்கையாகும்.சிவனைப் போல முருகப் பெருமானுக்கும் நாகங்கள் […]Read More

தொடர்

பத்துமலை பந்தம் |21| காலச்சக்கரம் நரசிம்மா

21. கரூரார் ஜலத்திரட்டு இரவு மணி 11. 55. தனது அறையில் நெட்டில் மூன்றாவது நவபாஷாணச் சிலையைப் பற்றிய குறிப்புகளைத் தேடிக் கொண்டிருந்தாள் கனிஷ்கா. எதற்கும் இருக்கட்டும் என்று கிடைத்த தகவல்களையெல்லாம் ‘காபி, பேஸ்ட்’ செய்து , புதிய folder ஒன்றை உருவாக்கி, அதற்கு ‘மூன்றாவது சிலை’ என்று பெயர் வைத்து, அதில் சேகரித்துக் கொண்டிருந்தாள். —-போகர் சித்தர் தன்னுடைய தவ வலிமையால் அணிமா, மகிமா, இலகுமா, கரிமா, பிராப்தி, வசுத்தவம், பிராகாமியம், ஈசத்துவம் என அட்டமா […]Read More

தொடர்

அஷ்ட நாகன் – 5| பெண்ணாகடம் பா. பிரதாப்

-அமானுஷ்ய தொடர்- நவக்கிரகங்களில் சனீஸ்வரன் தனிகரற்றவர். சனீஸ்வரனை ‘நீதிமான்’ என்று சாஸ்திரம் கூறுகிறது. ஏனெனில், அவருக்கு வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது. ஒருவரின் கர்ம வினைக்கேற்ப நற்பலன்களையும் சங்கடத்தையும் ஏற்படுத்துபவர். ‘சனியனே’ என்ற வார்த்தையை நாம் தப்பித் தவறியும் பயன்படுத்தி விடக்கூடாது. ஈஸ்வர பட்டம் பெற்ற அவரை ‘சனீஸ்வரன்’ என்று சொல்லி வணங்குவது உத்தமம். ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டகக் சனி, மரண சனி, மங்குசனி மற்றும் பொங்கு சனி என்று நாம், […]Read More

தொடர்

பத்துமலை பந்தம் | 20 | காலச்சக்கரம் நரசிம்மா

20. செல்வத்துள் எல்லாம் சிலை  மூன்றாவது நவபாஷாணச் சிலையை உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அதனைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் –இதுதான் நல்லமுத்துவின் அறையில் குடும்பத்தார் ஒன்பது பேரும் எடுத்துக்கொண்ட உறுதிமொழி. இந்த விவகாரத்தில் ஒன்பது பேரும் ஒற்றுமையுடன் செயலாற்ற வேண்டும் என்று தீர்மானித்தவுடன், அனைவரும்  மயூரியை எச்சரிக்கையுடன் பார்த்தனர்.  “மயூரி..! நீ இன்னைக்கு மலேசியன் ஏர்லைன்ஸ்ல ஏர் ஹோஸ்டஸா இருக்கே..! உன்னோட சானிடைசர் கம்பெனி வேற பிரமாதமாப் போகுது. இதற்குக் காரணம் நான் நம்ம நவபாஷாணச் சிலைக்கு செஞ்ச பூஜைதான். ஆக, […]Read More

தொடர்

அஷ்ட நாகன் – 4| பெண்ணாகடம் பா. பிரதாப்

-அமானுஷ்ய தொடர்- பாம்புகளில் ‘நாகங்கள்’ மட்டுமே தனித்தன்மை வாய்ந்தது.சக்தி மிக்கது.நாம் முதலில் பாம்புகளுக்கும் நாகத்திற்கும் உள்ள வேறுபாட்டை அறிய வேண்டியது அவசியம்.பாம்பு என்பது பொதுப்பெயர்.நாகம் என்பது சிறப்புப் பெயர். பாம்புகளில் படமெடுத்து ஆடும் பாம்புகளை மட்டுமே நாகம் என்று கூறுவர்.நாகங்களில் மூன்று வகை மட்டுமே தெய்வ சக்தி வாய்ந்தவை.அவற்றைப் பற்றி அடுத்தடுத்த அத்தியாயங்களில் விளக்கமாகக் கூறுகிறேன்.தற்போது நாகங்களில் கருநாகத்தைப் பற்றி சில செய்திகளைக் காண்போம். கருநாகத்தை ‘கிருஷ்ண சர்ப்பம்’ என்றும் கூறுவர்.நவகிரகங்களில் கருநீலமும் கருப்பு வண்ணமும் சனீஸ்வர […]Read More

தொடர்

பத்துமலை பந்தம் | 19 | காலச்சக்கரம் நரசிம்மா

19. நவத்தைத் தேடி நவவியூகங்கள்! பால்கனியில் இருந்து தான் கீழே பார்த்தபோது, போதினியும், சுபாகரும் இவர் கண்களுக்கு கந்தகோவும், காதம்பரியுமாகத் தெரிய, அதிர்ச்சியுடன் கீழே வந்து பார்த்தபோது, அவர்கள் போதினியாகவும், சுபாகராகவுமே கண்களுக்கு புலப்பட்டதைக் கண்டு வெலவெலத்துப் போயிருந்தார், நல்லமுத்து. இருப்பினும், கனிஷ்கா செய்த ஆர்ப்பாட்டத்தில், அவரது அச்சங்களும் குழப்பங்களும், பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன. ஆனால் இப்போது மயூரி கேட்ட கேள்வி, அவருக்கு மறந்திருந்த அம்சங்களை மீண்டும் தலைதூக்கச்செய்தது. “தாத்தா..! உண்மையிலேயே நாங்க உங்கள் வாரிசுகள் தானே..! இல்லே, […]Read More

தொடர்

அஷ்ட நாகன் – 3| பெண்ணாகடம் பா. பிரதாப்

-அமானுஷ்ய தொடர்- நாகங்களை கனவில் கண்டால் அந்த கனவுக்கு கண்டிப்பாக பலன் உண்டு என்று நாக சாஸ்திரம் கூறுகிறது. பொதுவாக, நாகங்களை கனவில் கண்டால் பலரும் அச்சம் அடைவர். நாகங்கள் எல்லாருடைய கண்களிலும் தென்படுவதில்லை. அவற்றைக் காண வேண்டுமென்ற விதி அமைப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே அவை புலப்படும். ஒருவரின் ஜாதகத்தில் ராகு கேது என்ற இரண்டு கிரகங்களின் பங்கு மிக முக்கியம். இந்த இரண்டு கிரகங்களும் சரியான இடத்தில் அமையும் பட்சத்தில், அவர் ராஜ பேக வாழ்க்கையை […]Read More

தொடர்

பத்துமலை பந்தம் | 18 | காலச்சக்கரம் நரசிம்மா

18.நீலி என்னும் வேலி அந்த நள்ளிரவில் நல்லமுத்து வீசிய வெடிகுண்டு, குறிஞ்சி பண்ணை வீட்டின் மாடி அறையில் குழுமி இருந்தவர்கள் இடையே பெரிய அதிர்வினை ஏற்படுத்தி, அவர்களைக் கல்லாக உறையச் செய்திருந்தது. “நான் நல்லமுத்து இல்லை. எனது பெயர் அஞ்சையா..! எனது தங்கை தேவசேனாவின் உண்மையான பெயர், ராஜகாந்தம்..!” –என்று நல்லமுத்து தங்களது உண்மையான பெயராக அந்த வீட்டைப் பார்த்துக் கொள்ளும் பணியாட்களின் பெயரைக் கூற, செல்வாக்கும், புகழும், நிரம்பிய பண வசதியால் செருக்குடன் அமர்ந்திருந்த அந்தக் […]Read More

தொடர்

அஷ்ட நாகன் – 2| பெண்ணாகடம் பா. பிரதாப்

நாக சாஸ்திரம் ! பாம்புகளைப் பற்றி பலவிதமான நம்பிக்கைகள் உண்டு. பாம்புகளில் ‘நல்ல பாம்பு’ பெரும்பாலான மக்களால் நம்பிக்கையுடன் இன்றளவும் வணங்கப்பட்டு வருகிறது. பாம்புகள் பயந்த சுபாவம் கொண்டவை. அவை, அடர்ந்த வனத்திலோ, இருளிலோ அல்லது குளிர்ச்சியான பகுதியிலோ பதுங்கி மறைந்து வாழும். ஒருவர் பாம்பை தாக்க முற்படும் போது, தப்பிக்க வழி இல்லாத காரணத்தால் தான் அப்பாம்பானது மூர்க்கமாக தாக்க முற்படும். பெரும்பாலான பாம்புகள் நஞ்சற்றவை என்பதே நிதர்சனம். சில வகையான பாம்புகள் தங்கள் இனத்தில் […]Read More

தொடர்

பத்துமலை பந்தம் | 17 | காலச்சக்கரம் நரசிம்மா

17. நான் அவனில்லை..! அந்த சனிக்கிழமை நள்ளிரவு..! சென்னை ஈசிஆரில், பாண்டிச்சேரிக்கும், மாமல்லபுரத்திற்கும், விர்….விர் என்று பைக்குகளும், கார்களும் பறந்துகொண்டிருந்தன. அவற்றில் நண்பர்களும், இளம் ஜோடிகளும் உற்சாகத்துடன் பயணித்துக் கொண்டிருந்தனர். மறுநாள் ஞாயிற்றுகிழமை விடுமுறையைக் களிப்புடன் கழிக்கப் போகிறோம் என்கிற ஆனந்தத்தில், ஆர்ப்பாட்டத்துடன் அவர்கள் சென்றுகொண்டிருக்க, கிழக்கில் சற்றுத் தள்ளி, கரிய சேலையைக் கட்டியிருந்த வங்கக் கடலின் அந்த உற்சாகத்தில் பங்குகொண்டு, அந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தனது அலைகளின் ஆப்பரிப்பால் பதிலளித்துக்கொண்டிருந்தது. இரு பக்கத்து ஆர்ப்பரிப்புகளும் தன்னை எந்த […]Read More