பிரதமர் மோடி

ஊரக அளவில் தூய்மை இந்தியா திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு தேசிய விருது தமிழகத்திற்கான விருதை அகமதாபாத்தில் நடைபெற்ற விழாவில், அமைச்சர் வேலுமணியிடம் பிரதமர் மோடி வழங்கினார் குஜராத்: மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளையொட்டி, காந்தியின் நினைவாக ரூ150…

இன்றைய முக்கிய செய்திகள்

உயர் நீதிமன்றத்தில் தினமும் ஒரு திருக்குறள்: வழக்கறிஞர்களுக்கு நீதிபதி அழைப்பு மதுரை உயர் நீதிமன்றத்தில் தினமும் ஒரு திருக்குறளையும், அதற்கான விளக்கத்தையும் மனப்பாடமாகச் சொல்ல வேண்டும் என வழக்கறிஞர்களுக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அழைப்பு விடுத்துள்ளார். நீலகிரியில் மீண்டும் தொடங்கிய கனமழை: மரம் விழுந்து…

மரம் வளர்ப்போம் மண் வளம் காப்போம்

இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் நலமுடன் ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்  மண் வளம் காப்போம் மனித வளமும் காப்போம் சுத்தமான காற்றை சுவாசிப்போம் பிறரை மகிழ்வித்து மகிழ் எல்லாந்தான் மனுஷங்கூட சேந்து வாழுது … ஆடு, குருதெ, கயுதெ, கோயி … இப்பிடி பலதும்… ஆனா இந்த பசு மட்டும்…

ஐஎன்எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரம்

ஐஎன்எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது விசாரணை நீதிபதி: பதில் மனு, விளக்க மனு தாக்கல் செய்யப்பட்டதா? சிபிஐ தரப்பு: விசாரணை அறிக்கை, பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ப.சி தரப்பு: விளக்க மனுவை தாக்கல் செய்தோம்;…

ஆய்வு கூட்டம் நிறைவு:முதலமைச்சர் பழனிசாமி

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டம் நிறைவு. சாலைகளில் பழுதுகளை சரிபார்ப்பது, நோய்தொற்று ஏற்படாமல் பாதுகாப்பது, தடையில்லா மின்சாரம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கு

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற டிஜிபிக்கு பரிந்துரை என தகவல் டிஜிபிக்கு தேனி சரக காவல் துணை தலைவர் கடிதம் எழுதியதாக தகவல். ஆள்மாறாட்டத்தில் சிக்கிய மாணவர் உதித் சூர்யா, மும்பையில் பதுங்கி இருப்பதாக தகவல்

பாஸ்போர்ட்

மாற்று பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் போது காவல் நிலையத்தில் இருந்து எஃப்ஐஆர் பெற்றுவர மக்களை கட்டாயப்படுத்தக் கூடாது – மத்திய அரசு.

அண்ணா பல்கலைக்கழகம்

தேர்வு முறையில் அண்ணா பல்கலைக்கழகம் கொண்டு வந்த புதிய விதிமுறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 2 வாரங்களில் பதிலளிக்க உயர்கல்வித்துறை மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!