கால்பந்து வீரர்களுக்கான சர்வதேச பயிற்சி வகுப்பு தொடக்கம்

சென்னை: சென்னை ஸ்ரீராமச்​சந்​திரா விளை​யாட்டு அறி​வியல் மையத்​தில், கால்பந்து வீரர்​களுக்​கான அவசர சிகிச்சை மற்​றும் ஊக்​கமருந்து தடுப்பு விழிப்​புணர்வு தொடர்​பான சர்​வதேச பயிற்சி வகுப்பு தொடங்​கி​யுள்​ளது.

ஆசிய கால்பந்து கூட்​டமைப்பு மற்​றும் அனைத்​திந்​திய கால்பந்து கூட்​டமைப்பு சார்​பில், சென்னை, போரூரில் உள்ள ஸ்ரீராமச்​சந்​திரா விளை​யாட்டு அறி​வியல் மையத்​தில் கால்பந்து வீரர்​களுக்​கான அவசர சிகிச்சை மற்​றும் ஊக்​கமருந்து தடுப்பு விழிப்​புணர்வு தொடர்​பான சர்​வ​தேச பயிற்சி வகுப்பு நேற்று தொடங்கி நாளை (12-ம் தேதி) வரை நடை​பெறுகிறது.

இதில், இந்​தியா மட்​டுமின்றி பிலிப்​பைன்​ஸ், மலேசி​யா, வங்​கதேசம், ஆப்​கானிஸ்​தான், மாலத்​தீவு, இலங்​கை, ஈரான், கிர்​கிஸ்​தான், உஸ்​பெகிஸ்​தான், துர்க்​மெனிஸ்​தான், தஜிகிஸ்​தான், பூடான் மற்​றும் நேபாளம் உள்​ளிட்ட ஆசிய கால்பந்து கூட்​டமைப்பு உறுப்பு நாடு​களைச் சேர்ந்த 50-க்​கும் மேற்​பட்ட விளை​யாட்டு மருத்​து​வர்​கள் மற்​றும் இயன்​முறை சிகிச்​சை​யாளர்​கள் பங்​கேற்​றுள்​ளனர்.

முன்​ன​தாக, பயிற்சி வகுப்பை ஆசிய கால்பந்து கூட்​டமைப்​பின் மருத்​து​வக் குழு தலை​வர் மருத்​து​வர் குர்​சரண்​சிங் தொடங்கி வைத்து பேசுகை​யில், “உலக கோப்பை கால்பந்து போட்​டி​யில் வெல்​வதே நோக்​கம் ஆகும்.

விளை​யாட்டு தொழில்​நுட்​பம் சார்ந்த மைதான பயிற்சி மட்​டுமல்​லாமல். விளை​யாட்டு அறி​வியல்​சார் மருத்​து​வ​மும் இந்த இலக்கை அடைவதற்கு முக்​கிய பங்​காற்ற வேண்​டும். ஒன்​றிணைந்து செயல்​பட்​டால் ஆசிய நாடு​கள் கால்பந்து விளை​யாட்​டில் உலகளா​விய இலக்கை எட்ட முடி​யும்” என்​றார்.

அனைத்​திந்​திய கால்பந்து கூட்​டமைப்​பின் தலை​வர் கல்​யாண் சவுபே தனது உரையில், “இந்​தி​யா​வில் கால்பந்து மிக​வும் பிரபல​மான விளை​யாட்​டாக உள்​ளது.

இந்த பயிற்​சி​யின் மூலம், விளை​யாட்டு மருத்​து​வர்​கள் மற்​றும் இயன்​முறை மருத்​து​வர்​களுக்கு கால்பந்து வீரர்​களை காயங்​களி​லிருந்து பாது​காக்​க​வும், காயங்​கள் ஏற்​ப​டா​மல் தடுப்​ப​தற்​கும் நவீன தொழில்​நுட்​பங்​கள் சார்ந்த செய்​முறை பயிற்​சியை அளிப்​பார்​கள்” என்​றார்.

ஸ்ரீராமச்​சந்​திரா விளை​யாட்டு அறி​வியல் மையத்​தின் தலை​வர் பேராசிரியர் எஸ்​.ஆறு​முகம், “பன்​னாட்டு தர நிலைகளுக்கு ஏற்ப கால்பந்து விளை​யாட்டு மருத்​து​வத்தை மேம்​படுத்​து​வதும், அவசர சிகிச்சை சார்ந்த மருத்​து​வப் பயிற்​சி, ஊக்க மருந்து தடுப்பு விழிப்​புணர்வை வழங்​கு​வதுமே இந்த பயிற்​சி​யின் நோக்​கம்” என்​றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!