பிப்.28-ல் வானில் ஓர் அதிசயம்: 6 கோள்கள் அணிவகுப்பு காணலாம்

சென்னை: வானில் ஒரே நேரத்தில் 6 கோள்​கள் அணிவகுக்​கும் அரிய நிகழ்வை, பிப்.28-ம் தேதி பொது​மக்​கள் கண்டு மகிழலாம் என்று வானிலை அறிஞர்​கள் தெரி​வித்துள்ளனர்.

சூரியக் குடும்​பத்​தில் உள்ள ஒவ்​வொரு கோளும் சூரியனைச் சுற்றி வரு​கின்​றன. இதில் பூமி ஒரு ​முறை சூரியனை சுற்​றிவர 365 நாட்​களாகின்றன. கோள்​களின் சுற்​று​ வட்​டப் பாதை​யில் ஒன்​றை ஒன்று சந்​திக்​கும் அபூர்வ நிகழ்​வு​கள் அவ்​வப்​போது நிகழ்​வதுண்​டு. அதன்​படி, 6 கோள்​கள் ஒரே நேர்க்​கோட்​டில் அணிவகுத்து வரும் அரிய நிகழ்​வானது கடந்த ஆண்டு ஜனவரி 22-ம் தேதி நடந்​தது.

அதேபோல் இந்த ஆண்​டும் 2 ​முறை ஒரே நேர்க்​கோட்​டில் சில கோள்​கள் வரவுள்​ளன. அதன்​படி, வெள்​ளி, வியாழன், சனி, செவ்​வாய், நெப்​டியூன் மற்​றும் யுரேனஸ் ஆகிய 6 கோள்​கள் ஒரே நேர்க்​கோட்​டில் பிப்.28-ம் தேதி தென்பட உள்​ளன. இதில் வெறும் கண்​களால் வெள்​ளி, வியாழன், சனி மற்​றும் செவ்​வாய் கோள்​களைப் பார்க்​கலாம். நெப்​டியூன் மற்​றும் யுரேனஸை மிக​வும் சக்​தி​வாய்ந்த தொலைநோக்​கி​களால் மட்​டுமே காண முடி​யும்.

இவற்​றைக் காண்​ப​தற்​காக அறி​வியல் அமைப்​பு​கள் சார்​பில் நாடு முழு​வதும் சிறப்பு ஏற்​பாடு​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. இதுகுறித்து வானிலை ஆய்​வாளர்​கள் கூறும்​போது, ‘‘கோள்​கள் ஒரே நேர்க்​கோட்​டில் வரவில்​லை. பூமி​யில் இருந்து பார்க்​கும் ​போது இந்​தக் கோள்​கள் ஒரே நேர்க்​கோட்​டில் இருப்​பது ​போல ஒரு மாயத் தோற்​றத்தை ஏற்​படுத்​துகின்​றன. இதில் வெள்​ளி, வியாழன், சனி மற்​றும் செவ்​வாய் கிரகங்​களை வீட்​டின் மாடி​யில், மைதானங்​கள் அல்​லது கடற்​கரை​யில் இருந்தே பார்க்​கலாம்.

செவ்​வாய் கிரகம் இரவு 9 மணி​யள​வில்​தான் உதய​மாகும். கிரகங்​களை தனித்​தனி​யாக​வும் பார்க்​கலாம். அதே​நேரம், யுரேனஸ் மற்​றும் நெப்​டியூனை சக்​தி​வாய்ந்த தொலைநோக்​கி​யால் மூலமே பார்க்க முடி​யும். எனினும், அவற்​றைக் கண்​டறிவது சற்று கடினம். இது​போன்ற 5 அல்​லது 6 கோள்​களின் அணிவகுப்பு மீண்​டும் இந்த ஆண்டு ஆகஸ்ட் 29-ம் தேதி​யும்​ நடை​பெறும்​’’ என்​றனர்​.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!