சமையல் எரிவாயு உருளையை பாடையில் ஏந்தி கோவை காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

 சமையல் எரிவாயு உருளையை பாடையில் ஏந்தி கோவை காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

    விலை உயர்வை திடீரென உயர்த்திய மத்திய அரசைக் கண்டித்து சமையல் எரிவாயு உருளையைப் பாடையில் ஏந்தியபடி கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

   சமையல் எரிவாயு உருளை விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்திருந்தார்.

  இந்த நிலையில்,கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், சமையல் எரிவாயு உருளையை பாடையில் எடுத்து வந்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  மேலும், மத்திய அரசை கண்டித்து பதாகைகள் ஏந்தியபடி காங்கிரஸ் கட்சியினர் கோஷங்கள் எழுப்பினர். காங்கிரஸ் கட்சியின் மகளிர் அமைப்பினர் உள்பட பல்வேறு பிரிவினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...