இரண்டு நாள் விடுமுறைக்கு பிறகு இன்று கூடும் தமிழக சட்டப்பேரவை

 இரண்டு நாள் விடுமுறைக்கு பிறகு இன்று கூடும் தமிழக சட்டப்பேரவை
இரண்டு நாள் விடுமுறைக்கு பிறகு இன்று கூடும் தமிழக சட்டப்பேரவையில், நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதம் நடைபெறுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை கூடிய தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில், துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இரண்டு நாள் விடுமுறைக்குப் பின்பு இன்று மீண்டும் கூடும் சட்டப்பேரவைக் கூட்டத்தின்போது, முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும்.
இதைத்தொடர்ந்து நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதம் நடைபெறுகிறது. இந்நிலையில், சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையை கண்டித்தும், தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் சிஏஏவுக்கு எதிரான போராட்டங்கள் குறித்தும், டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் குறித்தும் எதிர்க்கட்சிகள் பிரச்னையை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...