பேருந்து வசதி கோரி விருத்தாசலம் அரசுக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்…

 பேருந்து வசதி கோரி விருத்தாசலம் அரசுக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்…

  பேருந்து வசதி கோரி விருத்தாசலம் அரசுக் கல்லூரி மாணவர்கள் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினர்.

  கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில், விருத்தாசலம் செல்லும் அரசுக் கல்லூரி மாணவ, மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர், கல்லூரி நேரத்தில் பேருந்துகள் இயக்கக் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  உளுந்தூர்பேட்டை பகுதியில் இருந்து, விருத்தாசலத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில், ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இக்கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் உளுந்தூர்பேட்டையில் இருந்து காலை ஏழு முப்பது மணிக்கு செல்லும் அரசு நகரப் பேருந்தில் செல்வது வழக்கம். 

  இந்த நகரப்பேருந்து உரிய நேரத்தில் இயக்கப்படாததால் உளுந்தூர்பேட்டையில் கல்லூரி மாணவர்கள் அடிக்கடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் செவ்வாய்க்கிழமை காலை உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த மாணவர்கள் உரிய நேரத்தில் வராததால், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  இதே நேரத்தில் கூடுதலாக நகரப் பேருந்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். உளுந்தூர்பேட்டை போலீஸார் மாணவர்களை சமாதானப்படுத்தி மறியலை கைவிடச் செய்தனர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...