மரச்சட்டங்களில் கொகைன் கடத்தல்

 மரச்சட்டங்களில் கொகைன் கடத்தல்
நிலை வைக்கப் பயன்படும் மரச்சட்டங்களில் கொகைன் கடத்தல் பொலிவியாவில் இருந்து மரச்சட்டங்களில் மறைத்து வைத்து கடத்தப்பட இருந்த 450 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் சிக்கியது. 

பொலிவியா மற்றும் சிலி நாட்டு எல்லைப் பகுதியில் உள்ள அரிக்கா துறைமுகத்தில் கொகைன் ரக போதைப் பொருள் கடத்தப்படுவதாக பொலிவிய ராணுவத்திற்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ராணுவத்தினர் நடத்திய சோதனையில் வீடுகட்டும் போது நிலை வைக்கப் பயன்படும் மரச்சட்டங்கள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்தன. 
இதனைக் கண்ட ராணுவத்தினர் மரச்சட்டங்களை ஆராய்ந்த போது, அதில் துளையிட்டு கொகைன் போதைப் பொருள் பதுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மொத்தம் ஒன்றரை டன் கொகையினை ராணுவத்தினர் கண்டுபிடித்தனர்.  இதுதொடர்பாக விசாரணை நடந்து வருவதாக பொலிவிய அமைச்சர் ஆர்ட்டோ முரில்லோ தெரிவித்துள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...