வடகிழக்கு பருவமழை வரும் 15-ம் தேதி முதல் தொடக்கம் | இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!

 வடகிழக்கு பருவமழை வரும் 15-ம் தேதி முதல் தொடக்கம் | இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அக்டோபர் 15ம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்தாண்டைவிட இந்தாண்டு தென்மேற்கு பருவமழை அதிகமாகவே இருந்தது. இதனைத் தொடர்ந்து பெய்யும் வடகிழக்கு பருவமழை இந்தாண்டு வடதமிகழத்தில் இயல்பைவிட அதிகமாகவும், தென்தமிழகத்தில் இயல்பைவிட குறைவாகவும் பெய்ய வாய்ப்புள்ளது என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

மேலும் வடகிழக்கு பருவமழையின் துவக்கம் அக்டோபர் 3-வது வாரத்தில் இருக்க வாய்ப்புள்ளது. அக்டோபர் 4-வது வாரத்தில் மழை அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் இந்த 3 மாதங்களுக்கு மழை பொழிவானது இருக்கும்” என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

சென்ற ஆண்டு வடகிழக்கு பருவமழையால் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் போன்ற மாவட்டங்கள் கடுமையாக பாதித்தன. இந்தாண்டு அதனை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அக்..15ஆம் தேதியெல்லாம் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று முதல் வரும் 9 ஆம் தேதிவரை தமிழ்நாட்டில் கனமழை தொடரும் எனவும் தெரிவித்துள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...