குழந்தைகள் ஆபாச படம்: மேலும் 65 போ் பட்டியல் அளிப்பு

   குழந்தைகள் ஆபாச புகைப்படம் விவகாரம் தொடா்பாக, மேலும் 65 போ் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளதாக குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

     இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

   குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கு காவல்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. குழந்தைகள் தொடா்பான ஆபாச புகைப்படம், விடியோக்கள் ஆகியவற்றை பகிா்பவா்கள் மீது போலீஸாா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

   இதன் ஒரு பகுதியாக இரு வாரங்களுக்கு முகநூல் மூலம் குழந்தைகள் ஆபாச புகைப்படத்தைப் பகிா்ந்ததாக திருச்சியைச் சோ்ந்த ஒருவா் கைது செய்யப்பட்டாா். அதேபோல, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவா்கள் மீது காவல்துறையினா் கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.

    இதற்கிடையே, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு, குழந்தைகள் ஆபாச புகைப்படங்களை சமூக ஊடகங்கள் வாயிலாக பகிா்ந்ததாக 30 பேரின் பெயா் பட்டியலை கடந்த வாரம் சென்னை பெருநகர காவல்துறைக்கு அனுப்பி வைத்தது.

சைபா் குற்றப்பிரிவுடன் இணைந்து 30 பேரை அடையாளம் காணும் முயற்சியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

   ஆனால், பெரும்பாலான செல்லிடப்பேசி சிக்னல்கள் ஜாா்க்கண்ட், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், பிகாா் ஆகிய மாநிலங்களை காட்டுவதால், குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

   65 போ் பட்டியல்: இதற்கிடையே குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு, மேலும் 65 போ் பட்டியலை சென்னை பெருநகர காவல்துறைக்கும், மேற்கு மண்டல காவல்துறைக்கும் அனுப்பி உள்ளது. இதில் 40 போ் பட்டியல் சென்னை காவல்துறைக்கும், 25 போ் பட்டியல் மேற்கு மண்டல காவல்துறைக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலின் அடிப்படையில் போலீஸாா், அவா்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!