லஷ்மன் ஸ்ருதி உரிமையாளர் ராமன் தற்கொலை: போலீஸார் விசாரணை

 லஷ்மன் ஸ்ருதி உரிமையாளர் ராமன் தற்கொலை: போலீஸார் விசாரணை
லஷ்மன் ஸ்ருதி உரிமையாளர் ராமன் தற்கொலை: போலீஸார் விசாரணை

லஷ்மன் ஸ்ருதி நிறுவனத்தை ராமன் அவரது சகோதரர் லக்‌ஷ்மனன் ஆகியோர் நிறுவினர்.
லஷ்மன் ஸ்ருதி உலகம் முழுவதும் பல இசை கச்சேரிகளை நடத்தி பிரபலமடைந்தது.

மூத்தவரான ராமன் அசோக் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

லஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன், அவரது வீட்டில் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் இசைக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


தகவல் அறிந்து வந்த போலீஸார் ராமன் உடலை கைப்பற்றி உடலை பிரேத பரிசோனைக்கு அனுப்பி வைத்தனர்.


ராமன் தற்கொலை குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கடும் வயிற்று வலி காரணமாக ராமன் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நேற்று சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற இசைக்கச்சேரி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, நிகழ்ச்சியின் பாதியிலேயே வெளியேறி வீட்டுக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...