இன்றைய முக்கிய செய்திகள்

இன்று நடைபெறவுள்ள அரையாண்டு தேர்வு வினாத்தாள் ‘ஷேர்சாட்’ ஆப் மூலம் வெளியாகியது. 10ம் வகுப்பு சமூக அறிவியல், 11,12ம் வகுப்புகளுக்கான உயிரியல் வினாத்தாள்கள் வெளியாகின. சில தினங்களுக்கு முன் தமிழ், வேதியியல் பாட அரையாண்டு தேர்வு வினாத்தாள்கள் ஷேர்சாட்டில் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றப் போவது யார்? இன்று வாக்கு எண்ணிக்கை. ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் 81 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. காலை 10 மணி முதல் முன்னணி நிலவரம் தெரிய வரும். ஜார்கண்ட் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை, 81 தொகுதிகளிலும் துவங்கியது. எண்ணிக்கை நிலவரம்: காங்-ஜேஎம்எம் 22, பாஜக 15, ஜேவிம் 2, ஏஜேஎஸ்யூ 2 இடங்களில் முன்னிலை.

டெல்லி கிரோரி பகுதியில் துணி கடை குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு.

சென்னையில் திமுக கூட்டணி கட்சிகள் நடத்தும் பேரணிக்கு, 2 கூடுதல் ஆணையர், 12 துணை ஆணையர்கள் உள்பட 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். முதற்கட்டமாக 2 ட்ரோன்கள் மூலம் பேரணி கண்காணிக்கப்படும் என காவல்துறை தகவல்.

வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை – கல்வித்துறை தகவல்

ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் 2019: பாஜக+ : 29, காங்.+ : 42, மற்றவை : 10 தொகுதிகளில் முன்னிலை. ஜார்கண்ட் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கிறது, காங்கிரஸ் கூட்டணி மொத்தமுள்ள 81 தொகுதிகளில், 45 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை  பெரும்பான்மையை விட அதிக இடங்களில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை .

புதிய மாற்றத்தின்படி அஞ்சலக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் ஓராண்டுக்குள் எப்போது வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம்: பிபிஎஃப் கணக்கில் பெறும் கடன் தொகைக்கு, 1 சதவீதம் வட்டி குறைப்பு. மகாராஷ்டிராவை தொடர்ந்து ஜார்கண்டிலும் ஆட்சியை இழக்கிறது ஆளும் பாஜக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!