முக்கிய செய்திகள்

திண்டுக்கல் கொடைரோடு ரயில் நிலையம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ரயிலில் விழுந்து தற்கொலை. திருச்சியை சேர்ந்த உத்திரபதி, சங்கீதா, அபிநய ஸ்ரீ, ஆகாஷ் ஆகியோர் உயிரிழப்பு – போலீசார் விசாரணை.

இங்கிலாந்து பிரதமர் தேர்தலில், போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி 234 இடங்களில் முன்னிலை, தொழிலாளர் கட்சி 156 இடங்களில் முன்னிலை.பிரிட்டனின் தொழிலாளர் கட்சி தலைவர் பதவியில் இருந்து ஜெரேமி கார்பைன் விலகல். பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரத்தில் பின்தங்கி உள்ளதால் ராஜினாமா செய்தார்.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்து, ரூ.28,728க்கு விற்பனை.

திருச்சி ஸ்ரீ ரங்கநாதசாமி கோவிலுக்கு சொந்தமான சிலைகள் திருடப்பட்ட வழக்கில் அறநிலையத்துறை அதிகாரிகள், 6 பேர் மீது வழக்குப்பதிவு.

அண்ணா பல்கலை கழகத்தின் உறுப்பு கல்லூரியில் பணியாற்றும் உதவி பேராசிரியர்கள் சிலர், ஊதிய உயர்வுக்காக போலி சான்றிதழ்கள் சமர்பித்தது தகவல் உரிமை சட்டத்தின் மூலம் அம்பலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!