கறி கடையானதோ

 கறி கடையானதோ
தினம் தினம் செய்திகள்
திசையெல்லாம்  ரத்தவாடைகள்
காமம் தொலைக்க
கறி கடையானதோ பெண்ணினம்  ..

வெண்டைக்காய்க்கும் சுண்டைக்காய்க்கும்
போராடும் அரசியல் கூட்டம்  
சதை கொய்யப்படும் பெண்களுக்காய்
சபை ஏற மறுப்பது  ஏன் ..

வருவாரா என்பது தெரியாமலே
ஊதுக்ககுழாய் ஊதும்  ஊடகங்கள்
ரத்தம் இழக்கும் எம் பெண்டுகளுக்காய்
சித்தம்  சிவக்காதது  ஏனோ ?

ஆண் என்ற மமதையின்
நீண்ட வன்கொடுமை
தீ முகம் காணும்வரை  நீதான்
கொதித்து எழு  வேண்டும்  தோழி …

உன் நகம் என்ற கேடயமும்
உன் விரல் என்ற அம்பும்
தறுதலைகள் தலை பறித்து
சிறு மழலைகளுக்கு  நிம்மதி எழுதட்டும்

யாருக்கும் நீ குறைந்தவள் அல்ல
எவருக்கும் நீ சளைத்தவளும் அல்ல
குனிந்து நீ நிற்பதால்
பன்றிகள் முத்துக்களை பங்கிடுகின்றன ..

சக்தியென  எழுந்து வா
சதை கேட்போர்  தலை தெறிக்கட்டும்
உலகம் உன்னில் இயங்கட்டும்
இனி ஓர் வன்கொடுமை இங்கே வேண்டாம் ..

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...