காவிரி ஆற்றில் நீர்வரத்து 3000 கனஅடியாக  உயர்வு..!

 காவிரி ஆற்றில் நீர்வரத்து 3000 கனஅடியாக  உயர்வு..!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து திடீரென 1000 கன அடியில் இருந்து 3000 கன அடியாக அதிகரித்ததிருக்கிறது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த நான்கு மாதங்களாக நீர்வரத்து 1000 கன அடி முதல் 800 கனஅடி வரை மட்டுமே நீர்வரத்து இருந்ததால், ஒகேனக்கல் காவிரி ஆறு ஆங்காங்கு சிறு சிறு தண்ணீர் தேங்கி குட்டைகளாக காட்சியளித்தது.

கர்நாடக பகுதியிலிருந்து நீர்வரத்து குறைந்ததன் எதிரொலியாக தண்ணீர் இன்றி வறண்ட காவிரி ஆற்றில் இன்று நீர்வரத்து திடீர 3000 கன அடியாக அதிகரித்துள்ளது. திடீர் நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல் உள்ளூர் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வழக்கமாக கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறக்கப்பட்டாலோ அல்லது கர்நாடக பகுதிகளில் மழை பெய்தாலோ நீர்வரத்து அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு வழக்கமான ஒன்றாக இருந்த நிலையில் 1000 கனஅடியில் இருந்து நீர்வரத்து 4000 கனஅடியாக அதிகரித்தது அதிசயத்தையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி உள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...