அன்னையர் தின வாழ்த்துகள்/தாயெனும் தவம்/குறள் வெண்பா

அன்னையர் தின வாழ்த்துகள்
*
தாயெனும் தவம்
*
குறள் வெண்பா
*

  1. அன்னை எனக்குள்
    அறிவாய் அமைந்துமே
    என்னை வளர்ப்பாள்
    இனிது.

2 .தன்னை அறியவே
தாய்தந்த போதனை
என்னை வழுத்தும்
எழுந்து.

3.முன்னைப் பிறவியால்
முன்நிற்கும் நன்மைகள்
அன்னை உருவே
அறி.

  1. அன்னம் கொடுத்துமே
    அன்றாடம் காத்துமே
    அன்னியம் நீப்பாள்
    அவள்.
  2. அன்பில் அவளை
    அகற்றவே யாருளார்?
    இன்பில் தினமும்
    இயம்பு.
  3. அன்றில் பறவையாய்
    அன்றாடம் தேடுவாள்
    நன்றே நவில்வாள்
    நலம்.

7.அன்னியன் ஆனாலும்
அன்னை அகன்றிடால்
தன்னலம் பேணாள்
தனக்கு.

  1. அன்னத்தின் ஊர்தியான்
    அன்னையைத் தந்தாலும்
    உன்னியாய் நிற்பாள்
    உவந்து.
  2. ஆன்மா அவளின்
    அருள்மொழி கூறுமே
    ஊன்றும் துணையாவாள்
    ஓது.
  3. ஆன்றோன் ஆயினும்
    அல்லோன் ஆயினும்
    சான்றோன் என்பாள்
    சனித்து.
    *

அன்னத்தின்
ஊர்தியான்… பிரம்மா
உன்னி…தியானப் பொருள்
சனித்து..பிறப்பித்து..

முனைவர்
பொன்மணி சடகோபன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!