10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது..!

 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது..!

தமிழகத்தில் 2023-24 கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26-ல் தொடங்கி ஏப்ரல் 8-ந்தேதி வரை நிறைவடைந்தது. இந்த தேர்வை 12,616 பள்ளிகளில் இருந்து 9.10 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர்.

இதற்காக, மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் 48,700 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். ஏப்ரல் 12-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது.

இந்நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே10) வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு 10 ஆம் தேதி காலை 9.30 மணிமுதல் http://tnresults.nic.in ,  http://dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகளில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...