நாட்டு சேதியும் !!! நம்ம சேதியும்!!!

நாட்டு சேதியும் !!! நம்ம சேதியும்!!!
        தமிழகத்தில் இன்று பலத்த மழை எச்சரிக்கை!!!
      போன வருசம் மழை ஏற்படுத்திட்டுப் போன பாதிப்பையே இன்னும் ஒன்னும் சரி பண்ணல…. அதுக்குள்ள மறுபடியுமா…. ‘பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்’ங்கிற‌ மாதிரி ஏழைங்க தான் எப்பவுமே பாவம்…..
****************************************
     உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் உறுதி அளித்ததன் அடிப்படையில் தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி இன்று அறிவிக்க வாய்ப்பு உள்ளது. 
     
     சட்டுபுட்டுனு தேதிய சொல்லுங்கப்பா…. அப்படியாவது மழை பாதித்த பகுதிகள்ல வேலை ஒழுங்கா நடக்கட்டும்….
******************************************
     திருச்சி உள்ளிட்ட 6 விமான நிலையங்களை தனியார்மயமாக்க  இந்திய விமான நிலையங்கள் ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் ஆமதாபாத் ,திருவனந்தபுரம் உள்ளிட்ட 6 விமான நிலையங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
     
         என்னங்க நடக்குது நாட்டுல….. ஒரே குழப்பமா இருக்கு….. ரெண்டே ரெண்டு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க…. 1)எல்லாத்தையும் தனியாருக்கு வித்திட்டா அரசாங்கத்துக்கு என்ன வேலை?,2) இன்னும் எதைத்தா விக்காம இருக்கீங்க?
*****************************************
      செல்லிடப்பேசி சேவை கட்டணங்கள் ஏறக்குறைய 50 சதவிகிதம் வரை உயர்வு. 
      
        நீங்களுமா???? நடத்துங்க…. நடத்துங்க…. எரியிற வீட்டில புடுங்கின வரைக்கும் லாபம்…..
*****************************************

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!