எரித்துக்கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் குடும்பத்தினரை சந்தித்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை!

எரித்துக்கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் குடும்பத்தினரை சந்தித்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை!

         ஹைதராபாத்தில் எரித்துக்கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் குடும்பத்தினரை தெலங்கானா ஆளுநர் தமிழிசை இன்று சந்தித்து ஆறுதல் கூறினார்.  

     தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நெடுஞ்சாலையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. 26 வயதாகும் பிரியங்கா ரெட்டி கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், ஹைதராபாத் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே உள்ள பாலத்துக்கு அருகே அவரது உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மகளைக் காணவில்லை என்று புகார் கொடுத்ததன் அடிப்படையில் போலீசார் பிரியங்காவை தேடி வந்துள்ளனர். பெண் ஒருவரின் உடல் எரிந்து கிடப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் அளித்த தகவலின்படி, போலீசார் கண்டறிந்துள்ளனர்.  

ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் எரிக்கப்பட்ட இடத்துக்கு அருகே மற்றொரு எரிக்கப்பட்ட பெண்ணின் சடலம்!

    பின்னர், சுங்கச்சாவடி அருகே பதிவாகியுள்ள சிசிடிவி பதிவுகளை வைத்து குற்றவாளிகளை காவல்துறை தேடி வந்தது. அதன்படி, லாரி ஓட்டுநர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

     இந்நிலையில் ப்ரியங்கா ரெட்டியின் குடும்பத்தினரை தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று நேரில் சந்தித்து பேசினார். ப்ரியங்காவின் குடும்பத்தினருக்கு அவர் ஆறுதலை தெரிவித்தார். ஏற்கனவே அப்பகுதி காவல் நிலையத்தை மக்கள் முற்றுகையிட்டுள்ளதால் ஹைதராபாத் முழுவதுமே பரபரப்பாக காணப்படுகிறது. குற்றவாளிகளை கண்டறிந்து தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவர்கள் கூறி வருகின்றனர். 

    இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஷாம்ஷாபாத் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மற்றொரு பெண்ணின் உடலும் எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!