தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை..!

 தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை..!

சென்னையில் தொடர்ந்து ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில் இன்று ஒரு சவரன் ரூ.53, 360க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்தே சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது.  அந்த வகையில் நேற்று கிராம் ஒன்றிற்கு ரூ. 45 உயர்ந்து ஒரு கிராம் ரூ6,660-க்கும், சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.53,280-க்கும் விற்பனை செய்யப்பட்டது.  இந்நிலையில்,  இன்று கிராமுக்கு ரூ. 10 உயர்ந்து ரூ. 6,670க்கு விற்பனையானது.  சவரன் ஒன்றிற்கு ரூ. 80 உயர்ந்து ரூ. 53, 360க்கு விற்பனையாகிறது.

வெள்ளி நேற்று கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.88-க்கும் ,  ஒரு கிலோ வெள்ளி ரூ.88,000-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,  இன்று கிராமிற்கு ரூ. 1 குறைந்து ரூ.87க்கு விற்பனையாகிறது.  தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நடுத்தர மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...