இன்றைய ராசி பலன்கள் ( மே 07 செவ்வாய்க்கிழமை 2024 )

 இன்றைய ராசி பலன்கள் ( மே 07 செவ்வாய்க்கிழமை 2024 )

தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் மே 07ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

குரோதி வருடம் சித்திரை மாதம் 24 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 7.05.2024 சந்திர பகவான் இன்று மேஷ ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 11.17 வரை சதுர்த்தசி. பின்னர் அமாவாசை. இன்று மாலை 03.19 வரை அஸ்வினி. பின்னர் பரணி. மகம் பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷ ராசி அன்பர்களே!

திடீர் செலவுகள் ஏற்பட்டாலும், . தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமை அவசியம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். சிவவழிபாடு சிரமம் தவிர்க்கும்.

ரிஷப ராசி அன்பர்களே!

இன்று பல வகைகளிலும் அனுகூலமான நாள். சிலருக்கு எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உண்டு. அரசாங்கக் காரியங்கள் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தந்தைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் பணியாளர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். லாபம் வழக்கம்போல் இருக்கும். இன்று மகாவிஷ்ணுவை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மிதுன ராசி அன்பர்களே!

இன்று எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்புள்ளதால் அவர்களுடன் பேசும்போது வார்த்தைகளில் நிதானம் தேவை. தந்தையுடன் அனுசரணையாக நடந்துகொள் ளவும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்கும். வியாபாரத்தில் சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். இன்று கணபதியை வழிபட தடைகள் விலகும்.

கடக ராசி அன்பர்களே!

காரியங்கள் அனுகூலமாகும். புதிய முயற்சி எடுப்பதற்கு சாதகமான நாள். செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது. நண்பர்களிடமிருந்து எதிர்பார்த்த தகவல் கிடைக்கும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டு. தந்தையின் தேவையை நிறைவேற்றும் வகையில் சிறிது அலைச்சல் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம் போலவே இருக்கும். கந்தக் கடவுளை வழிபடுவது நன்று.

சிம்ம ராசி அன்பர்களே!

தந்தை வழி உறவுகளால் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும். முக்கிய முடிவு களை பிற்பகலுக்குமேல் மேற்கொள்வது சாதகமாக முடியும். தொலைதூரத்திலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும். பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும். பைரவரை வழிபடுவது நலம் சேர்க்கும்.

கன்னி ராசி அன்பர்களே!

செலவுகள் அதிகரிக்கும் நாள். கையிருப்பு கரைவதுடன் சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக் குகள் நீங்கும். உறவினர்களால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் சாதுர்யமாகச் சமாளித்துவிடுவீர்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பணியாளர்கள் உற்சா கமாக உழைத்து விற்பனையை அதிகரிப்பார்கள். சூரியபகவானை வழிபடுவது நன்று.

துலா ராசி அன்பர்களே!

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உங்கள் முயற்சிகளுக்கு உறவினர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். ஆனால், எதிரிகள் வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் உதவி கேட்டு வருவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். இன்று சுதர்சன வழிபாடு சுகம் தரும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது கவனமாக இருக்கவும். காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டா லும் பாதிப்பு எதுவும் இருக்காது. சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் மறைமுகத் தொல்லைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. இன்று முருகப்பெருமானை வழிபடுவது சிறப்பு.

தனுசு ராசி அன்பர்களே!

எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலையே காணப்படும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். சிவபெருமானை வழிபடுவது சிறப்பு.

மகர ராசி அன்பர்களே!

புதிய முயற்சி எதுவும் இன்றைக்கு வேண்டாம். அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். செலவுகளைச் சமாளிக்க கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் சில ருக்கு ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைப்பது தாமதமாகும். சிலருக்கு பணிச்சுமை அதிகரிக்கும். குடும்பப் பெரியவரின் அறிவுரை பயனுள்ளதாக இருக்கும். வியாபாரம் எப்போதும்போல் நடை பெறும். இன்று ஆஞ்சநேயரை வழிபட அல்லல்கள் குறையும்.

கும்பராசி அன்பர்களே!

பிற்பகலுக்குமேல் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு நண்பர்கள் மூலம் பணவரவு கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப் பீர்கள். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்று.

மீனராசி அன்பர்களே!

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பிள்ளைகள் வழியில் எதிர்பாராத செலவு களும் ஏற்படக்கூடும். அவர்களின் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தவும். நண்பர்களால் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சியைத் தொடங்கலாம். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். விநாயகப் பெருமானை வழிபடுவது நலம் தரும்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...